Pages

வியாழன், 2 ஏப்ரல், 2026

சரித்திரம் பிறழ்ந்துரை அல்லது பொய்யினைப் பரப்புதல்

 : நீ,

 பித்தனைப் போலவே அவன்சொல் கேட்டுப்

பிதற்றுவ தெற்றுக்கடா

மத்தினைப் பிடித்து  மண்ணில் கடைந் திடில் 

மதுரத்    தயிர்மறுத்தே,

மெத்தச்  சுவைதரு  மோர்வரு   மோசொல்க!

மென்மேல்  பிழைசெய்கிறாய்

எத்தனை ஆண் டுகள் அடிமைப்  புத்தியில்

இருந்ததனால் அழிந்தாய்.


ஆரியர் என்றது  சங்கத்  தமிழரை

அறிவாளிகள்  அவரே;

சீரியகல்விப் பெருக்குடைப் பிறரையும்

குறித்திடும்  தொடரதுவே!

ஆரியன் என்றது இனப்பெயர் என்பவன்

அறிவுடையான்  அல்லனே!

ஆரென்ற பலர்பால் விகுதியும் தமிழிலே

பிறரொன்றும்  அறியாததே.


பொருள்:

எற்றுக்கடா -  எதற்கடா

மென்மேல்  -  மேலும் மேலும்

மத்து -  சிலுப்பிக் கடையும் கோல், 

மதுரத் தயிர் மறுத்து -  இனிய தயிரைக் கடையாமல்

மெத்த - மிகுந்த

சுவைதரு-  சுவையான

ஆர் என்ற...  -  வந்தார் சென்றார் என்ற பணிவுப் பன்மை விகுதி.

பிறர்  -  தமிழ்ப்புலவர் அல்லாதவரும் தமிழறிவு இல்லாதவரும்.

இனப்பெயர் -  ஓர் இனத்திற்கு வைக்கப்பட்ட பெயர்

சரித்திரம் என்பது சரியாகவும் திறமாகவும் சொல்லப்பட்ட வரலாறு. திறம் என்ற சொல் விகுதியாய் வரும்போது றகரம் ரகரமாகும்.

புனைவுகளுடன் சொல்லப்படுவது சரியாகச் சொல்லப்படாதது.  திறம்படச் சொல்லப்பட்டிருந்தாலும். திறம் என்பது ஒளிவு மறைவு இன்மை குறிக்கும்.  புனைந்து சொல்வதிலும் ஒளிவு மறைவு இன்மை கடைப்பிடிக்கப்படுதல் கூடுவதே.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

பகிர்வுரிமை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.