உற்பத்தி என்னும் சொல்.
இயற்கையில், ஒரு கரு தாயின் கருப்பையில் '' உள் பற்றி'' யபின் வளரத் தொடங்குகிறது. இதனை ஆய்ந்துணராமல், உற்பத்தி என்பது தமிழன்று என்று மயங்கியோரும் உளர். சரியான சிந்தனை செய்யாமையே காரணம் ஆகும். உற்பத்தி என்பது இந்த இயற்கை விதியை அறிந்த சிற்றூரான் அமைத்து வழங்கிய சொல்.
இதையும் படித்து அறிந்துகொள்ளுங்கள். https://sivamaalaa.blogspot.com/2013/11/blog-post_20.html.
இதற்கு வேறு வகைகளிலும் அமைப்பு அறிவிப்பாருண்டு. எனினும் இதுவே இதன் உண்மைப் பொருளை நன்கு அறிவிக்கும் விளக்கமாகும்.
விதைகள் கொட்டைகளிலும் உள் பற்றிய பின்புதான் வளர்ச்சி உண்டாகிறது.
சிலர் வெளியில் பற்றியபின் வளர்வனவும் உண்டு என்னலாம். சில நுண்மிகள் ஒன்றன் வெளியில் பற்றியபின் வளர்கின்றன என்னலாம். வழக்கில் வெளியில் பற்றுதலும் உற்பத்தியில் அடங்கும். இதைத் தனியாக விளக்கவேண்டின் ''வெளிவளரி'' என்று ஒன்று வழங்கிக்கொள்ளலாம். ஏற்புழி அவ்வாறு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.