பலர் உண்ணும் அமர்வூட்டு முறையை, பந்தி என்று சொல்கிறோம். இந்தப் பந்தி என்ற சொல்லினை, நம் பவணந்தியாரின் முறையைக் கையாண்டு பிரித்துப் பார்த்தால், எளிதிற் பொருள்கண்டு மகிழ்வினை எய்தலாம். சொல்லினை ஆய்வுசெய்கையில் மகிழ்வு அடைந்துகொள்வது, மனப்பதிவு ஆய்வு முறைக்கு வித்திடும் என்று எதிர்க்கலாகாது.. எதைச் செய்தாலும் செய்வதில் மகிழ்வு கொள்ளுதல் என்பது ஒரு பங்காற்று முறையாகும்.
பன்மை+ தி > பன்+தி > பந்தி என்று எளிதாக அமைத்துக் காண்க. மைவிகுதி இணைத்து விலக்கிப் புணர்த்துவது பவணந்தியார் பண்புப்பெயர்கள் அமைவதற்குச் சொன்ன முறை. இங்கு எளிதிலுணர்தல் என்ற பெறுதல்முறைக்காக இதைப் பரிந்துரை செய்கிறோம்.
பல வேலைத் தலங்களில் ஊழியர் பலர் இந்நாளில் வேலையிலிருப்பர். இவர்கள் பெரும்பாலும் பலராயிருக்கும் சிறிய வேலைக்காரர்கள் தாம். சிறு வேலைக்காரர்கள் என்பது தோன்றும் வண்ணம் சிறு என்பதை முன்னில் இட்டு, சிறுப்பந்தி என்று இணைத்தால் சிறுவேலைப் பலர் என்று பொருந்தும். சிறுப்பந்தி என்பதற்கு சிற்பந்தி என்று போட்டு, இன்னும் எளிமையாக்கி, சிப்பந்தி என்று ஆக்கிவிட்டால் என்ன? வேலை எளிதில் முடிந்து ஒரு புதுச்சொல்லும் கிட்டிவிட்டது.
இயற்றமிழின் இனிமை கண்ட புலவர்-- இதனை ---பகுதிச் சொல்லை மிக்கக் கடிய முறையில் வெட்டி எடுத்துச் சொல்லை இயற்றுவதை,------- இயற்றமிழ்ப் புலவர்கள் விரும்பார். அவர்களுக்கும் எரிச்சலின்றிச் சொல்லாக்குதல் கடனாகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.