Pages

சனி, 23 ஆகஸ்ட், 2025

க> ச வருக்கம் திரிபுவகை [களி>சளி]

 இதனை இன்று   ஆய்வு செய்கிறோம்.

கேரளம் என்ற சொல்லை ஆய்ந்த தேவநேயனார்  சேரல்  என்ற சொல்லே சேரலம் என்ற திரிபு கொண்டு பின் கேரளம் என்று திரிந்தது என்று சொன்னார்.  ச என்ற எழுத்து  க என்று திரிவதானால்தான் இவ்வாறு கூறப்பட்டது. சளி என்பது  ஏறத்தாழ அரிசிக்களி போன்றே இருப்பதால்  களி > சளி என்று திரிதல் இயல்பு. இந்த மாற்றம் கள்>சள் என்று மாறி ஏற்பட்டமையின் இது பொருத்தமே. ( Medical people say that phelgm is a vegitable matter.  )அரிசித் தூள்  பன்மைத் தன்மை உள்ளமையின் கள் என்பது சள் என்று திரிந்து பொருண்மை பிறழாமல் வந்தது. பலர் இருக்கும் இடம் ''கள்> களம்''  எனப்படுவது அறிக. பரவலாகப் பறிக்கப்படுதலால்   கள்> களை என்பதும் காண்க. கள் > களர் என்பதும் அது. பலமரங்கள் (தென்னை) எடுக்கத் தருதலாலும் மற்றும் பல சொட்டுக்கள் வடிதலாலும் கள் என்ற பானம் அவ்வாறு குறிக்கப்படலாயிற்று.

தனது வலிமை பலவாறு விரிந்து ஓய்ந்துவிடுதலை  சள் > சளை > சளைத்தல் என்பதும் குறிக்கிறது. விரிவாகப் பல இடங்களிலும் உடலைத் தேய்த்துத் தடவும் விளையாட்டு :   சள் >சல்> சல்லாவம் எனவாகும். பல சிறியவான கற்கள் சல்லி என்பர்.  இவ்வாறு அறிக.

குருளுதல் > சுருளுதல் என்பதையும்  க - ச திரிபில் கவனத்தில் கொள்ளுங்கள்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை

இதில் சில எழுத்துக்கள் அழிந்துவிட்டனவாகையால் இது 

மீட்டு எழுதப்பட்டது என்பதறிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.