ஓங்கு என்ற தமிழ்ச்சொல் ஒரு மெய்யெழுத்துக் குன்றி, ஓகு என்று வரும். ஓங்கு என்பதன் பொருள் "கூடுதல்" ஆவதுதான். நடப்பவன் ஓடும்போது அவன் இடத்தை அடையும் நேரம் குறைகிறது. குறைந்த நேரத்தில் கூடுதலான இடப்பெயர்ச்சியை அடைகிறான். ஆகவேதான் டு என்னும் வினையாக்க விகுதி பெற்று ஓ+டு என்பது ஒரு சொல்லாகிறது. இடம் அடைதல் குறிக்கும் கு விகுதி பெற்று ஓ+கு > ஓங்கு ஙகர மெய்பெற்று மென்மை அடைந்த சொல்லாகும். வேண்டியாங்கு இந்த இடைத்தோன்றிய ஒற்று நீங்கு இடைக்குறையாவதும் ஒலிநூல் பொருத்தமுடைய அமைப்பே ஆகும்,
ரோகிணி நட்சத்திரத்தின் பெயரில் இடையிலிருக்கும் சொல்தான் ஓங்கு> ஓகு என்பது.
தன்வினை பிறவினை என்று வினைகளைப் பாகுபடுத்துவர். வீழ்தல் என்பது தன்வினை. வீழ்த்தல் என்பது பிறவினை. புதிய வீரனை பழைய படைவீரன் வீழ்த்தினான் என்பது, தானே வீழாமல் இன்னொருவனை விழச்செய்தல் என்பது தெளிவாகக் காட்டப்பெறுகிறது. ஓங்கு என்ற சொல் இவ்வாறே ஓக்கு என்று பிறவினைப்படுத்தப்படும். ஓக்கு என்ற வினைச்சொல் தொல்காப்பியத்திலும் இலக்கியங்களிலும் கிடைக்கிறது. இன்றைக் கவிதைகளில் இச்சொல் வருவதில்லை.
ஆகவே இடைக்குறையானால் ஓங்கு ஓக்கு என்ற இரண்டுமே ஓகு என்று வருவதால் தன்வினை பிறவினைப் பேதத்தை இவற்றுள் பொருளை ஆராய்ந்துதான் கண்டுபிடிக்கவேண்டும்.
ஓகு என்பது அம் விகுதியை மேற்கொண்டு ஓகம் என்றாகி நீர் ஓங்குதலைக் குறிக்கும்: அதாவது வெள்ளப்பெருக்கு. நீர்கூடுதலாவது என்று முன்சொன்னசொல்லைப் பயன்படுத்தி விளக்கலாம், கம்பநாடன் இதைப் படைப்பெருக்குக்குப் பயன்படுத்தியுள்ளான்.
உருவில் அழகாக இருக்கும் நட்சத்திரம் அல்லது விண்மீன் தான் இது. உரு+ ஓகு+ இணி > உரோகிணி ஆகிறது. இன் என்ற சொல்லும் இண் என்ற சொல்லும் எதுவந்தாலும் இப்பெயர் அமைந்துவிடும். இண் என்பது இணைப்புக் குறிக்கும் அடிச்சொல். இன் என்பதும் இணைப்பையே குறிக்கவல்லது, கண்ணின் கருமணி என்னும்போது இன் என்ற உருபு வந்து இணைப்பைக் காட்டுவதை அறிந்துகொள்ளுங்கள்.
இலக்கிய மேற்கொள்களை விலக்கி எழுதியுள்ளோம். இவை வேண்டுமானால் எழுதுங்கள்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.