இன்று பௌதிகம் என்ற பழைய சொல்லைக் கண்டாய்வோம்.
புவியில் உள்ள பொருள்கள் உண்மையில் நிலத்திலும் நீரிலும் காற்றிலும் பரவிக் கிடக்கின்றன. ஆகாயவெளி எனப்படும் வான்வெளியிலும் உள. இதற்கு விசும்பு என்றும் பெயர். தீயில் எரிந்து அழிந்தும் சாம்பலாகின்றன. இவ்வாறு பரவு பொருள் என்று உணரப்பட்டு, அதற்கு பரவுபொருள் என்றே பெயரிடுதல் எளிதாய் இருக்கும் என்று எண்ணினாலும் எதையும் வெள்ளிடையாகச் சொன்னால் பெயர் மக்கள் மனத்தில் திறமான பெயராய் அமையாது எனக்கருதி, பரவித் திகைவது என்ற பொருளில் பரவு+ திகை+ அம் > பரவுதிகையம் என்ற சொல்லமைக்கு வந்து சேர்ந்தனர். திகைதல் என்ற இங்கு உரு, உள்ளடைவு, நிறம், மற்றும் தன்மை என்னும் இன்ன பொருட்களால் ஒரு தோற்றம் அல்லது மேனி உடையதாதல். திகை அம் என்பது திகம் என்று மாற்றப்பட்டு, பரவு என்பது இடைக்குறையாக்கப் பட்டு பவு என்று மாற்றப்பட்டது. இதுவே "பவு+ திகம்" என்று ஆயிற்று.
இப்போது ஒரு புதிய சொல் கிடைத்துவிட்டது. ஆர்க்கிமீடிஸ் அடைந்த மகிழ்ச்சியை இவர்களும் அடையலாம். யூரிக்க என்று கத்தி ஆரவாரிக்கலாம், ஏன் மகிழக்கூடாது, பவுதிகம் என்ற சொல் எதோ இல்லாமல் வந்த சொல் போல மருட்டும்,
இதை இன்னும் மாற்றம் இழைத்து பௌதிகம் என்று சொல்லிவிட்டால் தமிழில் இல்லாத வேறு சொல் என்று அச்சுறுத்தவும் ஆகும்,
உங்களுக்குத் தெரிந்தவை இது சமஸ்கிருதம். அவர்களுக்கும் அமைந்த விதம் தெரியும்.
இடைக்குறை கடைக்குறை முதற்குறை என்பவற்றால் மருட்டற்கு உள்ளான சொற்கள் பல. கழுமலர், அதாவது தண்ணீரால் கழுவப்படும் மலர் என்று ஆகி அது கமல என்று ஆகி கமலம் என்று அம் விகுதி பெற்று ஆட்சியில் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்.
பரவு திகை அம்> பரவுதிக அம் > பவு திக அம் > பவுதிகம் : பௌதிகம்,
இயற்பியல் என்ற சொல்லை எப்படி அமைத்தனர்?
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.