Pages

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

துர்க்கையம்மன் காய்கறி அலங்காரம்



காய்கறி அலங்காரத்தில் ---  அந்தக்

கனிவான முகம்தந்த அழகென்ன அழகுகாண்

ஆய்வறி வலவர்களும் ---  இந்த

அகிலத்தில் வேறெங்கும் காணாத அழகுமெய்

ஓய்வுறு நெடுநினைப்பில் --- அம்மையை

ஒருபோதும் நீங்குதல் இல்லாத இருப்பினில்

சேயென ஒடுங்கிடிலோ ---  நெஞ்சம்

சிந்திக்க உருத்தரும்  அன்னையின் ஒளிமுகம்  .


அருஞ்சொற்கள்:

காய்கறி -  உண்ணும் சைவப் பொருள்கள்.

கனிவான -  அன்பு மிளிரும் (முகம்)

ஆய்வறி - யோகமுறையில் இருந்து தேடுவது.  இருப்பு என்பதும் அது.

இதை ஆழ்வறி என்று மாற்றிவிடுவோம். பின்னர்.

அகிலம் -  உலகம்

வலவர் - வல்லமை உடையோர்.

மெய் -  உண்மை

இருப்பு -  யோக முறையில் அமர்தல்

நீங்குதல் இல்லாத -- எழுந்து போய்விடாமல் 

சேயென -  பிள்ளையாய்

ஒடுங்கிடில் -  ஓரிடம் சேர்ந்து நிட்டை செய்ய

உருத் தரும் ---  காட்சி கொடுக்கும்.

படம்: கருஜி.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.