Pages

சனி, 31 ஆகஸ்ட், 2024

செனித்தல், ஜனித்தல், ஜனனம் முதலான

 இந்தச் சொற்களைச் சிந்திப்போம்.

ஜனம் என்ற சொல்,  சமஸ்கிருதம் என்று அறியப்படுவது.  இதன் அம் விகுதி கெட்டு. இகரம் ஏறி வினைச்சொல்லாகும்.  இந்த விகுதி முதலியவை தமிழில் பயன்படுபவைதாம், இங்கு இகரமாக வருவது பிறமொழிகளிலும் வினையாக்கத்துக்கு வருகிறது. மலாய் மொழியில்  இ வினையாக்க விகுதி வந்து ஒட்டி,  செயப்பாட்டு வினையாகிறது.  ( di-perchaya-i) எனக் காண்க.  ஆங்கிலத்தில் இ- யுடன்  ise. ize வினையாக்கம் பெறும். ( conceptualize). தெரிந்ததுகொண்டு தெரியாததை விளக்குதலே போதிப்பு முறை.  வேறுசில இங்குத் தேவையில்லை.

செல்+ நிற்றல்>  செனித்தல்  என்று ஆகும். பிறத்தல் விந்து சென்று கருவறையில் நிற்பதால் மனிதன் உருவெடுத்துப் பிறக்கிறான். செனிற்றல்> செனித்தல் என்றும் ஆகும் ஆதலின், செனித்தல் என்பது ஒரு பல்பிறப்பிச் சொல். செல்நிற்றல்> செல்நித்தல்> செனித்தல் > சனித்தல்> ஜனித்தல்.

ஆனால் பிறத்தல் என்ற வினைச்சொல், தாயினின்று பிறிதாகுவதையே (பிறத்தல் என்று) குறிக்கிறது எனற்பாலதைக் கருத்தியலாகக் கொள்கிறோம்..  எனவே தாயினின்று நீங்குதலில் ஆவதுதான் பிறப்பு என்று கொண்டு,  ஜனித்தல் ஆயினும் பிறத்தலாயினும் இக்கருத்திலேதான் தோன்றிய சொற்கள் என்று முடிபு கொள்ளுதல் சரி. இது மரபாதிச் சிந்தனை.

தனித்தல் என்ற சொல், தனியாகுதல். இது பிறத்தலையும் பொதுவாகக் குறிக்கும். ஆனால் வழக்கில் இது இப்பொருளில் கையாளப்பெறுவதில்லை. இது வழக்கிலில்லை என்றாலும், இச்சொல் இன்னொரு பேச்சுமுறைக்குப் பயனாம் நேரம் வந்துற்ற காலை இது சொற்பிறப்புக்கு ஏற்கப்படுவதில் தடை ஏதும் விளைவதில்லை.  தனி என்பது சனி என்றும் திரிதற் குரிய தாகையினால் தனித்தல்- சனித்தல் என்பது மறுத்த லேறாத உண்மை.  இச்சொல் வந்து ஜ என்ற அயல்மெருகு ஏறி ஜனித்தல் என்றானது என்பதே சரி. தகரம் சகரமான திரிபுகள் பல முன் தரப்பட்டுள்ளன.

தகரச் சகரத் திரிபு:   கரணவாதனை என்ற சொல் கரணவாசனை என்றும் வரும்.

பூசைப் பாடகர்களிடையே  (பாணர்கள்)  தோன்றிய சமஸ்கிருதம் தமிழ்ப் பிறத்தல் என்ற சொல்லின் செயலொற்றுமைக் காரணியாக,  ஜனித்தல் என்ற சனித்தலான தனித்தலையே பிறத்தலுக்குப் பயன்படுத்திக்கொண்டதென்பது வெள்ளிடைமலையாகும். சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழியன்று. சமஸ்கிருதத்திலிருந்து அவர்கள் கடன்பெற்றனர். இது இந்திய மொழி.

இதன் மூலம் ஜனித்தலின் மூலம் அறியப்பட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.