Pages

திங்கள், 17 ஜூன், 2024

பலபெயர்கள் உள்ள அசுரர்கள் அவற்றுள் தயித்தியர்.

 இன்று இதுபற்றிச் சில அறிந்துகொள்வோம்.

அசுரர்களுக்குப் பண்டைக்காலத்தில் பல பெயர்கள் இலக்கியங்களில் வழங்கின. அதில் தயித்தியர் என்பதும் ஒன்று.

தைத்தல் என்பது நீங்கள் அறிந்த சொல்தான். ஒன்றைத் தைத்தல் என்றால் இரு துண்டுகளை இணைத்து ஒன்றாக்குதல்.  வினைச்சொல் தைத்தல் தான்.

தை+ இற்று + இ + அர்

> தையிற்றியர்

> தயித்தியர்  ஆகும்.

ற்று என்று ஈரெழுத்துக்கள் இரட்டிவரும் சொற்கள், த்து என்று திரியும்  எடுத்துக்காட்டு:  சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்.

றகர இரட்டிப்பு  த்த என்றானதும்

லகரம் ரகரம் ஆனதும் காண்க.

தை இற்றவர்கள் தை இத்தவர்கள்  தயித்தவர்.  இறு> இற்று > இற்ற> இத்த. எச்சவினைத் திரிபு,

அசுரர்கள் என்போர் சுரர்கள் என்போருடன் இணையாது பிரிந்திருந்தவர்கள்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.