Pages

செவ்வாய், 28 மே, 2024

ரிக் வேதம். வாமதேவன் மண்டலம் 4 சொல்

 நான்கு  வேதங்களிலும் ரிக் வேதம் என்பதே முதல் என்று சொல்லப்படுகிறது. எனினும் இது தேடிச் சேர்க்கப்பட்ட மிக்கப் பண்டை நாட்களில் இவற்றைச் சேகரித்த புலவர் எங்கெங்கு தேடி வெற்றிபெற்று கிடைத்தவற்றை இணைத்து ஒரு நூலாக்கினார் என்று தெரியவில்லை.  அவர் அறிந்திருந்தவற்றை மட்டுமே இணைத்து ஒரு மனப்பாடக் கோவையாக ஆக்கி அவரிடம் பயின்றவர்களிடம் மனப்பாடம் செய்வித்தார் என்பதே நடைபெற்றதாக இருக்கலாம். இந்தப் பழங்காலத்தில் இப்போது உள்ளதுபோல் வசதிகள் இல்லை. வேறு குழுவினர் அறிந்திருந்த மனப்பாடங்கள் இவரை எட்டாமற் போயிருந்தால் அது இவர் குறையன்று.  நாடெங்கும் பயின்றோர் அறிந்தவை எல்லாம் இதில் அடங்கிவிட்டதென்று கூறுவதற்கில்லை.  பல பாராயணங்கள் விடுபட்டிருக்கக் கூடும், இன்று தொலைந்திருக்கவும் கூடும்.

சரி, இல்லாமற் போனவற்றுக்கு என்ன செய்ய இயலும்.  நான் காவது மண்டலத்தை இயற்றியவர் வாமதேவர் என்னும் முனி.  இவர் பெயர் எப்படி வந்தது என்று பார்ப்போம்.

வாமதேவர் என்பதில் தேவர் என்பது தமிழிலும் உள்ள சொல்தான். இங்கு "வாம" என்பதை மட்டும் விளக்குவோம்,

இவர் பெயர் வாழ்மாதேவர் என்பது,  இதில்  ழ் இடைக்குறைந்து வாமா என்றானது.  பின்பு  வாமா என்பதும் வாம என்பதும் ஒரு   பெரியவேறுபாடு என்று எண்ணுவதற்கில்லை.  இதற்குப் பல விளக்கங்கள் உள்ளன.  வந்தான், வாங்க என்று எண்ணற்ற அடிச்சொல் மாற்றங்கள் உள்ளன.  கண் என்பது பெயரிலும் காண் என்று வினையிலும் மாற்றங்கள் உள்ளன. உலகில் பல மொழிகளில் குறில் நெடில் இல்லை,

இவர் பெயர் தமிழிலிருந்து போந்தது ஆகும்.

வாழ் மா தேவர் > வாமதேவர்

இன்னும்  பல பெயர்களை ஆய்வு செய்வோம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.