Pages

செவ்வாய், 16 ஜனவரி, 2024

அனுகூலம் சொல்.

 இன்று "அனுகூலம்" என்ற சொல்லை நோக்குவோம்.

கூலம் என்பது உணவுப் பொருள்களில் தானியங்களைக் குறிக்கும்.  தானியம் என்பது, அரசனுக்குத் திறையாகச் செலுத்தினது போகத் தனக்குரியவையாகக் குடியானவன் ஒருவன் சேமித்து வைத்திருக்கும் நெல், கம்பு, சோளம் , வரகு என இன்னபிறவுமாகும். தான்+ இயம்.  தான் முயன்று தனக்கென "இயற்றுவித் திருப்பவை" என்பது பொருள்.  " தனக்கு இயன்றவை" என்றும் வரையறுக்கலாம். கூலம் எனில் சேர்த்து வைத்தவை என்பது சொற்பொருள். நாளடைவில் இதன் பொருள் கூலங்கள் எனப் பொதுப் பொருள் பயந்தது. (அரிசி, கம்பு,  சோளம், என இன்னும் உள்ளவற்றைக் குறிக்க வழங்குதல் )

அனுகூலம் எனின், யாது?  வீட்டில் வேறு உணவுப் பொருட்கள் இல்லாவிடினும் கூலம் இருக்குமாயின் அவற்றை அணுகிப் பசியைத் தீர்த்துக் கொள்ளலாம். பசிக்கு அணுகத் தக்கது கூலம் என்பதே  சொற்  பொருளாகும். இதிலிருந்து "உதவுவது  இது " என்பது பெறுபொருளாயினவாறு கண்டுகொள்க.

பெறுபொருள்-- derived meaning.

அன் என்பதும் அண் என்பதும் சொல்லாக்கத்தில் மாற்றீடுகள். அன்பு என்பதில் அணுக்கம் இருப்பதை அறிக.

அன்பு என்ற இடுகைப் பதிவில் விரிவு அறிக.

https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_95.html

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.