Pages

புதன், 28 ஜூன், 2023

உரூபன் சாருகா திருமண வாழ்த்து

 இன்று நம் வாசகர்கள்  உரூபனும் சாருகா  இருவரும் சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.  இவர்களுக்கு நாம் நம் வாழ்த்துப்பாட்டினை வழங்குகின்றோம்.



 


பாரினில் பன்னெடுங் காலம்  பைந்தமிழ்

வாரியில் உருபன்  சாருகை இ ருவரும்

ஓரிணை யாகவே சீருற  நீந்தியே

யாரும்  அறிந்திடா இன்புடன் வாழ்கவே.


பேறெனப்  படும்பதி   னாறும்  பெறுகமுன்

ஏறியுச்  சிம்மலைச்  செல்வம்  அடைகநல்

ஆறு  மாறிடா  அன்பு     வழியினில்

நூறும் வெல்லுக  நுண்மதி   ஓங்குக.


சிவமாலா கவி.

பொருள்:

பார் = உலகம்

வாரி  -  கடல்

ஓரிணை -  சோடியாக

இன்புடன் -  இன்பமுடன்

பேறு =  செல்வங்கள்

ஏறியுச்   சிம் மலை---  ஏறி உச்சி மலை

நீட்டம் வேண்டின் ஓரெழுத்துத் தோன்றியது: ம்.

ஆறு -  செல்லும் வழி

நூறு   மதிப்பெண்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.