Pages

புதன், 19 ஏப்ரல், 2023

சுவாஹா என்பதன் பொருள்.

 சுவாகா  (  சுவாஹா)  என்று மந்திரத்தின் இறுதியில் சொல்லப்படுவது, "உண்மை நலமே  ஆகுக" என்பதுபோலும்   ஓர் ஆக்கம் தரும் சொல்லாகும். இதுவே ஒரு தெய்வம் என்று சொல்வோருமுண்டு.  இச்  சொல் அல்லது சொற்றொடர்  ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில்  பொருள்காண்போரால்  உணர்த்தப் பெறுகிறது.

இது தமிழில் இவ்வாறு உருவாகுதல் காண்க.

சு   <   சுவ (  ஸ்வா )   <  சொ.   (  சொந்தம் )

வாகா <   ஆக    (   ஆகட்டும் )     ஆதல் வேண்டுகிறேன், வேண்டுகிறோம்..

ஆகவே, நாம் வேண்டும் கடவுளுக்கு இவை யாவும் ( படையல் )  சொந்தமானவையாய்   ஆகட்டும்.

அதாவது,  சென்றுசேர்க என்பது.

இவையாவும் உமவாக.

தமிழில் உமது என்பது ஒருமை,  உம  என்பதுதான் பன்மை.  ஆனால் உம என்பது வழக்கில் இல்லை.  இக்காலத் தமிழில் உம்மவை என்றால் ஒத்துவரக்கூடியதாய் இருக்கும்,.  இப்படி அறிவதன் மூலம்,  ஒரு காலத்தில் இருந்து பின் ஒழிந்தவையையும் உணர முடியும்.  ஒழிந்த மட்டைகளில் சுவடுகள் மரத்தில் காணப்படுதல் போன்றதே இது.

சொந்தம் -   சொ  

சொ + அம் >  சொயம்  ( இங்கு யகர உடம்படுமெய் தோன்றியது ). > சுயம் உடம்படுமெய்  இல்லாவிடின்  சொ+ அம் >  சொ + ம் >  சொம்  ஆகும்.

சொம்  என்றால் சொத்து. சொம் என்பது பழந்தமிழ்.  அகரவரிசைகளில் இல்லாமலும் இருக்கலாம். பலவற்றில் இல்லை.

பூசாரி மொழியில் சோகா அல்லது ஸ்வாகா.

வீட்டு மொழியில் சொ(ந்தமா)க>  சோ ஹா.  அதுவே  ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.