மக்கள் குழுக்களிடையே அக்குழுவிலில்லாத வெளியாருக்குப் புரியாத பல்வேறு எழுத்துருவற்ற இலக்கணங்களில்லாத மொழிகள் வழங்கிவந்தன என்பது உண்மையாகும். இத்தகைய மொழிகளில் சிலவற்றையாவது நாம் கேட்டு அது புரியாமல் விழித்திருக்கிறோம். இவற்றுள் ஒன்றிரண்டு பரவி அவற்றில் பாடல்களுமிருந்தால், புரியாதவன், அது வெள்ளைக்காரன் கொண்டுவந்தது, அல்லது "ஆரியன்" கொண்டுவந்தது என்று ஏதாவது சொல்வான். இந்தோனேசியாவில் பல மொழிகள் குழுமொழிகளாய் உள்ளன. அவற்றுக்கு எழுத்து ஒன்றுமில்லை. மேடான் ( சுமத்திரா) பகுதிகளிலும் உண்டு. ஜாவா மொழி மலாய் மொழியிலிருந்து வேறுபட்டது. அதிலுள்ள சொற்களை ஆய்ந்து ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளனர், பலவருடங்களுக்கு முன்பு.
தெரியாதவன் அப்படி ஒன்றுமில்லை என்று சொல்லி மனநிறைவு கொள்வது அவனது இயலாமை.
சமஸ்கிருதம் என்பது இப்படி உண்டாகி, பின்னர் புதிய புகுந்த சொற்களால் வளம்பெற்று இலக்கியம் பெற்ற உயர்ந்த மொழியாகும். இதன் முதல்கவி வால்மிகி முனிவர். இவருடைய வழித்தோன்றல்கள் இன்று கவனிப்பாரற்ற குலத்தவரானது ஒரு சோகமே ஆகும். ( சோர்(வு)+கு+அம் > சோகம்). [ துயரமே சோர்வு தருவது]
இனிச் சகஜம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.
அகம் என்பது வீடு. வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் பல நிகழ்வுகள், இயல்பானவை என்று மக்கள் கண்டுகொண்டனர். வீட்டில் பாயில் படுத்துக் கிடப்பது இயல்பு ( சகஜம்). இதுபோது குறிப்பாக யாராலும் எடுத்துக்கொண்டு கவனத்தில் கொள்ளப்படாதவை இயல்பாகும், ( சகஜம்!). அகவட்டத்தில் ( வீட்டுச் சூழலில்) தோன்றிய சொல்லே சகஜம் என்பது.
அகத்தில் அடுத்தடுத்து நடக்கும் முன்மையற்ற செயல்கள்.
அகம் - சகம்.
அடு(த்தல்) ( அடுத்தடுத்து ) - அஜ். ( அடிக்கடி ).
அம் - அமைந்தது.
சக + அஜ + அம் > சகஜம்.
இதைச் சகசம் எனலாம். இது சிற்றூர் வழக்கில் உள்ள சொல்.
கடைதல்.*
கடையம் கடயம் கடம் கஜம் ( கடைந்த முகமுடையதுபோல் தோன்றும் ஆனை).
*This etymology is given by European scholars.
இன்னொன்று:
படி ( பாடு என்ற பொருளில்) > பஜி,
"முருகனைப் பஜி மனமே - திருமால்
மருகனைப் பஜி மனமே!"
"பாண்டுரங்க நாமம் பஜி மனமே..."
"உன்னை நினைச்சேன் , பாட்டுப் படிச்சேன்" - படி என்பதை அறிக.
பண்டைத் தமிழில் உரையிடையிட்டவை தவிர யாவும் பாடல்களே.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்ன
Reviewed on 01022023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.