Pages

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

சுயம்பு தம்பு (தம்புசாமி, தம்பையா)

 சிவபெருமானை அகண்ட சுயம்பு  என்று விளக்கியுள்ளனர்.  அவர் அம்பிகையின் ஒரு பாகன்* என்றும் சொல்வர்.

முருகனுக்கும் சிவனுக்கும் ஒரு வேற்றுமை யில்லை என்றும்  சிவனே முருகன் என்றும்  அருணகிரிநாதர்   தம் பாடல்களில்  கூறுகிறார்.  ஒரு பெரும்புலவர் சிவனைப் பாடுவேன்  ஆனால்  முருகனைப் பாடமாட்டேன் என்று மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தாராம்.  அப்புலவரைத் தடுத்தாட்கொண்டு,  தன் உருவைக் காட்டி,  அவரை ஆண்டருளினாராம் முருகப்பெருமான். இருவரும் ஒருவரே என்று உணராதிருந்த புலவர் அவர்.

இயற்கையின் கண்ணுறும் அழகெல்லாம் முருகனே.  முருகு எனில் அழகு.

இனிச் சுயம்பு என்ற சொல்லைக் காண்போம்.

சொந்தமாகவே தோன்றி  இருத்தலை உடையதுதான்  சுயம்பு.

சொம் என்பது அடிச்சொல்.

சொம்+ தம் >  சொந்தம்.  இங்கு தம் என்ற இறுதி வருதல் காண்க.

தம் என்பதை முன் விளக்கியுள்ளோம்.

இனியும் சிறிது சொல்வோம்.

சொ >  சொம்.

சொ + (அ )ம் >  சொம்.     சொ + அம் >  சொயம்.>  சுயம்.   யகர உடம்படுமெய்.

முதலாவது அமைப்பில்,  அகரம் தொகுந்தது.   இரண்டாவதில் யகர உடம்படுமெய் தோன்றியது.   உடம்படுமெய் அற்ற அமைப்பும்  அஃது தோன்றிய அமைப்புமே இரண்டுக்கும் உள்ள வேற்றுமை.

சொ +  து >  சொத்து.

சொம் + து > சொத்து.  இதில் மகரம் தொக்கது.

சொம்+  து + அம் >  சொம்+ தம் > சொந்தம்.

சொந்தமாகத் தோன்றுதல் என்ற வழக்கை நோக்குக.

தானே முகிழ்த்தல்: முகிழ் > மூர் > மூர்த்தி.   தி விகுதி.

சுய =  சுவ.

சுயவம்பு >  சுயம்பு.    அம் =  அழகு.  அம்+ஐ > அம்மை,  அழகு.  சுய+ அம்+ பு.

சுவயம்பு > சுயம்பு.

 சொயம்பு > சுயம்பு.

இன்னா ஓசை விலக்கியே சொல்லாக்கம் முழுமை அடையும். இது ஏன் என்று புரியவில்லை என்றால் பின்னூட்டம் செய்து கேளுங்கள்.


இனி, தம் என்பதும் தாமே தோன்றியது என்று அமைந்து,  சுயம்பு என்றே பொருள்தரும்.

தம் + பூ .  (தாமே பூத்தல்,  பூத்தலுக்கு உள்ள பொருள்களில் தோன்றுதல் என்பதும் ஒன்று.)   பூ > பூமி.

தம்பூ >  தம்பு.   (தானே தோன்றியது).   பூ என்பதை நீட்டினும் குறுக்கினும் ஒன்றுதான்.

சுயம்பு தான் தம்பு.

தம்பு என்பதும் சிவநாமமே.  தம்பையா, தம்புச்சாமி என்பனவும் அதே.


அறிக மகிழ்க.

மீள்பார்வை பின்னர்.

எழுத்துப் பிறழ்ச்சிகள் காணின் பின்னூட்டம் செய்து உதவவும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.