Pages

புதன், 4 ஏப்ரல், 2018

கேடயம், கேட்டி



அம்பு நம்மை நோக்கி ஏவப்படுமானால் அது நமக்குக் கெடுதல்தான். அத்தகைய கெடுதலினின்று நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது.  வெறும் கைகாளால் அம்பைத் தடுக்க இயலுமோ? அதைத் தடுக்க ஒரு இரும்பு முறமோ பலகைத் தடுப்போ ஒரு கூடையோ தேவைப்படலாம்.

இதற்காகவே செய்யப்பட்டதுதான் கேடயம்.

இந்தச் சொல்:
கேடு -   வருகின்ற அம்பைக் குறிக்கிறது.
  -      அங்கேயே நிறுத்துவது. ( படர்கைச் சுட்டு).
அம் -  விகுதி.

பொருள்: வருகின்ற கேட்டினை (அம்பை ) ங்கேயே நிறுத்தும் வட்டத் தடுப்புத் தகடு.

வண்டிமாட்டுக்குத் தார்ப்போடும் கம்பு  கேட்டிக்கம்பு எனப்படும்.  கேடு+இ  =  (கேடுபயப்பது.) கம்பு - தடி. தார்ப்போடுவதைக் கேடு என்ற சொல்லினின்று அமைத்தமையால், பண்டையர்  அத்தகைய செயல்களைக்
கடிந்தனர் என்று தெரிகிறது.

மதிலுள் ஒரு மேடையிலிருந்து கேடயங்களைப் பயன்படுத்துவர். இம்மேடை
பரிகை (பரிசை) என்றும் சொல்லப்படும்.

கேடயம் என்ற சொல் கேடகம் என்றும் திரியும்.

கேடயம் :  தடுதட்டம் எனினுமாம்.

மறுபார்வை செய்யப்பட்டது: 13.06.2020.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.