Pages

புதன், 28 மார்ச், 2018

சிவமாலா வலைத்தளமோ ஓட வில்லை....!


சிவமாலா  வலைத்தளமோ ஓட வில்லை
செய்தனரே அதுவென்ன? வாட வில்லை
இவண்மீண்டும் வருகின்றேன் பாடலொன்றைப்
புனைந்துங்கள் முன்வைத்தேன்  தேடு முன்னே
கவண்வைத்துக் குருவியைப்போல் சிக்க வைத்துக்
காட்டுக்குள் போட்டாலும் கடுகி வந்து
கவிமாலை சொல்லாய்வு கவினு ரைகள்
கனிவோடு தரமுருகன் அருளே செய்வான். 

இது 23.3.2018ல் எழுதப்பட்டது.  வலைத்தளம் வசப்பட்டது
போல் தோன்றினாலும் எதையும் பதிவேற்றம் செய்ய
முடியவில்லை. இந்தப் பாடலை மட்டும் சேமித்து வைத்து
வேறோர் இடத்துக்கு அனுப்பி இப்போது மீட்டெடுத்தோம்.
அந்தத் தடையை நினைவு கூர்வது நல்ல அறிகுறியா 
என்று தீர்மானிக்க இயலவில்லை. எழுதப்பட்டதைப்
படித்து மகிழுங்கள்.

பல காரணங்களால் அவ்வப்போது தடைகள்
ஏற்பட்டுக்கொண்டுதாம்  உள்ளன. என்றாலும்
தொடர்வோம்.

நம் வலைத்தளத்தைத் தேடினால் வேறு தளங்களுக்கு
மாற்றிவிடுதலும் நடக்கிறது.  இத்தளம் இல்லை என்றும்
அறிவிப்பு வருகிறது. கவலை வேண்டாம்.

ை நிகழ்ந்து இன்னொரு நாட்டில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.