Pages

திங்கள், 26 மார்ச், 2018

அணுவும் ஸ்தம்பித்தலும்



தம்பித்தல் > ஸ்தம்பித்தல் என்ற சொல்லை ஆய்ந்து காண்போம்

மற்ற கருவிகள், உறுப்புகள் அல்லது பாகங்களுடன் இணைந்து செயல் பட்டுக்கொண்டிருந்த ஒரு பொருள் செயல்பாடாமல் நின்றுவிட்டால் அதைத் தம்பித்து விட்டதென்று கூறுவோம்.  இது “ஸ்தம்பித்து” விட்டதென்பது ஒரு மாற்று வழக்கு.

தம் என்பது தமிழில் பன்மைப் பதிற்பெயர்.  தாம்> தம்.

ஒன்று என்று நாம் சொல்லும் எந்தப் பொருளும் ஒரே ஒரு பொருளாய் இயங்குவதில்லை.  எடுத்துக்காட்டாக:  ஒரு மனிதன் என்பவன் பல உறுப்புகள் ஒன்றாக இணைந்து செயல்படும் ஒரு பிறவி. அவன் இறந்துவிடும் போது அவனுள் ஏதோ ஓர் உறுப்பு செயல்படாமல் நின்றுவிட்டது.  அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகள் இயங்கவில்லை என்பதே பொருள்.  அவை “தாம்” ஆகிவிட்டன.  அவை தானாகியோ தாமாகியோ இயங்குதலை விட்டன.

இந்த நிலையை,  தானித்தல்  அல்லது தன்னித்தல்  என்று அமைக்காமல் தம்பித்தல் என இச்சொல்லில் அமைத்தது ஒரு பேரறிவு ஆகும்.

இதற்குக் காரணம் அணுவைத்தவிர பிற அனைத்தும் இணைந்தே செயல்படுபவை.  அவை தம்பித்து விடுகின்றன அல்லது “தாமித்து “ அல்லது தாமாகி விடுகின்றன.

அணுத்திரட்சிகள் இணைந்ததே பொருள்.  அத் திரட்சிகள் இயங்காமை “ தம்பித்தல்” ஆகும்.

தமிழின்மூலம் ஆய்ந்தாலே இந்த அறிவியல் உண்மை புலப்படும்,  வேறு தன்னிறைவுச் சொல்லாய்வுகளில் இது விளக்கப்படுதல் இயலாது.

தம்பித்தல் என்பது ஸ்தம்பித்தல் என்றானது ஒரு திரிபு அல்லது மெருகூட்டல் ஆகும்.

தமிழில் அணு என்ற ஒரு சொல் பண்டைக்காலம் தொட்டு வழங்கி வருகிறது. “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்பதில் அணு என்ற சொல் மிளிர்கின்றது.  அண் என்பதிலிருந்த அணு என்ற சொல்லைப் படைத்துக் கொண்டனர் தமிழர். ஓர் அணு மற்றோர் அணுவை அணுகியே திரண்டு பொருள்களை உருவாக்குகிறது என்பதை அறிந்த தமிழர்  அணுகுதல் என்ற சொல்லினடியாகிய அண் என்பதிலிருந்து இதற்குப்  பெயரிட்டது இன்னொரு பேரறிவு ஆகும்.

தமிழை அறிக.
 நிறைவைப் பெறுக.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.