Pages

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

அன்னியோன்னியமாக இருக்கிறார்கள்.



இந்த இரண்டு குடும்பங்களும் எத்துணை அன்னியோன்னியமாக இருக்கிறார்கள்; இதுபோலவே உலக மிருந்தால் எங்கும் சமாதானமே நிலவும் என்று பேசிக்கொள்வதைச் செவிமடுத்திருப்பீர்கள்.

இந்தப் பேச்சில் வந்த அன்னியோன்னியத்தை அலசி ஆராய்வோம்.
இது:

அன்ன இய ஒன்னியம்!

அன்ன =  அவ்வளவு.

இய =  வாத்தியத்தின்

ஒன்னியம் =   ஒற்றுமை.

ஒன்று  என்ற சொல் ஒன்+து =  ஒன்று.  ஒன் என்பதே அடிச்சொல். து என்பது அஃறிணை விகுதி.  அஃறிணை அல்லாத இடங்களிலும் வேறு சில பிற்காலச் சொற்களிலும் வரும்.   இகரச் சுட்டு ஏறி இது என்றும் அகரச் சுட்டு ஏறி அது என்பதிலும் வரும்.   எடுத்துக்காட்டுகள்:  பருத்தல் : பரியது:  பரு+ அது + அம் = பருவதம்; மலை;  கண்> கணி > கணித்தல் :  கணி+ இது + அம் = கணிதம்.  ஓர் இகரம் வீழ்ந்தது.   கணிதம் என்று சொல்வதே நாவுக்கு நல்லது. கணியிதம் என்று சொல்வது ஒருவகையில் முட்டாள்தனம். என்ன “ணியி”  “ இயி””  .  இலக்கணம் தெரியாவிட்டாலும் புத்தியாவது இருக்கவேண்டாமா?

துணியில் கூடுதலாகத் தொங்கும் கீற்றுக்களை தையற்காரன் வெட்டி வீசிவிட்டுத்தானே இரவிக்கை  தைக்கிறான்?  சொல்லும் அது போலவே!

ஒன் என்பதே அடி;  ஒன்+ இயம் =  ஒன்னியம்.  ஒன்: ஒன்றாகிய; இ = இந்த; அம் : தன்மை காட்டும் விகுதி.  பொருள்: ஒற்றுமை.  ஒன்+து (ஓன்று ) என்பது ஒற்றுமை. ஒன்னு என்பதும் அதே.  ஒண்ணு என்பதும் அதே. திரிபுகள் பல. இத்தனை திரிபுகளுக்கும் இடம் ஏற்பட்டுத்தான் தமிழ் பல மொழிகளாய்ப் பிரிந்து வழங்குகிறது.   ஒன் என்ற அடிச்சொல்லை வெள்ளைக்காரனும் மேற்கொண்டது  நமது வளத்துக்கு ஒரு சான்று. 

ஒற்றுமை என்றால் இயம்போல ஒன்றாக இயங்குவதே ஒற்றுமை. வெவ்வேறு வாத்தியக் கருவிகள் இயங்கினாலும் என்ன இனிமை. என்ன ஆன்ந்தமாக இருக்கிறது. இசைக்கலையே  இனிதாகும். எல்லாம் குழைந்து செவிக்குள் வருவதுபோல.  கவலையை மறக்க இசையில் மூழ்கவேண்டுமென்பதை இயம் என்பது நமக்குக் கற்பிக்கிறது.

அன்ன இய ஒன்னியமாகவே இருப்போம். அன்ன இய என்பவற்றை இயைக்க அன்னிய என்று புணர்ந்தது.  இது  அந்நிய ( அயல் ) என்பதினும் வேறானது.
இதில் ஓர் அகரம்  குறுக்கப்பட்டது .   அன்+(ன் அ ) + இய  = அன்+ன் இய = அன்னிய.    0ன்+இ = 0னி.

அன்னிய ஒன்னியம் >  அன்னியொன்னியம் > அன்னியோன்னியம். இதில் ஒகரம் ஓகாரமாக நீண்டது.   மருவி அமைந்த சொல்.

இனிமேல் போவியோ அடி ?   போவியோடி?  இதெல்லாம் பேச்சு வழக்கைப் பின்பற்றி அமைந்த திரிபுகள்.  போவாயோ> போவியோ? இகரத்தை அடுத்து 
ஓகாரம் வருவதும் ஓர் இனிமைதான்.

வியோ!   னியோ!  யாராவது கத்திக்கொண்டிருக்கும்போது குறிப்பெடுத்துக்கொள்க.   கைப்பேசியைக்கொண்டு பதிவுசெய்க.

அன்ன இய ஒன்னியமாக இருங்கள். இசைபோலும் இயைக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.