Pages

புதன், 31 ஜனவரி, 2018

விளங்காதவனுக்கு எப்படி விளங்கவைப்பது



விளங்காதவன் யார்?

ஒவ்வொரு மனிதனும் தான் எல்லாவற்றையும் அறிந்துவிட்ட்தாகவே நினைத்துக்கொண்டு செயல்பாடுகளில் இறங்கிவிடுகிறான், இத்தகையோரை மேய்ப்பதென்பது ஒரு பெரிய கலை, இதற்காக இப்போது பெரிய கல்விச்சாலைகள் உள்ளன. உயர்நிலைப்பள்ளிகள் போன்றவற்றில் இவற்றை முழுமையாக்ச் சொல்லிக்கொடுக்க முடியாது.  வேலையில் ஈடுபட்டிருப்போருக்கு  அவ்வப்போது கொஞ்சம்  கால இடைவெளி விட்டு இக்கலைகளில் தேவையானவற்றைக் கற்பிப்பதே நல்ல விளைவுகளை ஏற்படுத்தித் தருமென்பதை இப்போது பல நிறுவன்ங்களில் உணர்ந்திருக்கிறார்கள்.

ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பத்து எழுத்தாளர்களுக்கு மேல் வேலைபார்த்துவந்தனர். இவர்களில் பலர் நல்ல எழுத்தாளர்கள்  என்றாலும் அரசில் பணியாற்றும் மந்திரிகளைச் சாடியே எழுதிவந்தனர். இவர்கள் எழுதுவது மக்கள் வாசிப்பதற்கு நன்றாக இருந்தாலும் அடிக்கடி வழக்கறிஞர்களிடமிருந்து கடிதங்கள் வந்தபடி இருந்தன. இரண்டு மூன்று வழக்குகளும் தொடங்கப்பட்டு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்தன.

கூட்டத்தில் தீர்வு:

தலைமை ஆசிரியராய் இருந்தவர் ஒரு கூட்டத்தைக் கூட்டி வழக்குகள் அதிகரித்துவருவதைச் சுட்டிக்காட்டினார்.  எழுத்தாளர்களோ தாங்கள் எழுதும் முறைகளை மாற்றிக்கொள்ள முடியாது என்றனர். காரணம் என்னவென்றால் நாட்டில் எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் எல்லாம் சட்டப்படி எழுத்தாளர்களுக்கு இருக்கிறது.  இதை விட்டுக்கொடுக்க முடியாது. அப்படித்தான் எழுதுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது பெரிய தலைவலிதான். --- இந்த சுதந்திரங்களையெல்லாம் தலைமை அதிகாரிதான் தடுக்கிறார் என்ற இரீதியில் வாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

சரிசரி.   நீங்கள் எல்லாம் இட்டப்படியே சட்டப்படியே எழுதுங்கள். நீங்கள் தவறிவிட்டதாகத் தீர்ப்பளித்து நட்ட ஈடு கட்டும்படியாகத் தீர்ப்பு வந்துவிட்ட வழக்குகளில் ஆகும் எல்லாச் செலவுகளையும் எழுதுகிறவரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.  நமது குழும்பு ஏற்றுக்கொள்ள முடியாது.  அதுமட்டுமின்றி குழும்புக்கு ஏற்படும் எல்லாச் செலவுகளையும் நீங்களே சரிப்படுத்திவிடுங்கள். நான் உங்களைக் கட்டுப்படுத்தவில்லை  என்று தலைமை அதிகாரி சொன்னார்.

தலைமை தேவை

நட்டங்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர் எழுத்தாளர்கள்.
அப்படியானால் நான் சொல்கிறபடி எழுதுங்கள். வழக்குகள் வராதபடி பார்த்து எழுதுங்கள். எனது மேற்பார்வை இல்லாமல் எழுதுவதை அனுமதிக்க முடியாது என்று தலைமை அதிகாரி சொல்லவே,  வேறுவழியின்றி எழுத்தாளர்கள் ஒப்புக்கொண்டு இப்போது எல்லாம் நன்றாக நடைபெற்று வருவதாகத் தகவல்.
ஆகவே ஒவ்வொரு நிறுவனத்திலும் தலைமை தேவையானதாகிறது.

இந்தக் கட்டுரையில் வரும் சொற்களைப் பின்னர்
அலசி ஆராய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.