Pages

சனி, 16 டிசம்பர், 2017

ஒரு காதல் கவி: புதுமையின்பம்

புதுமையின்பம்!



புதுமையின்பம்! ஓடிவா!
காதலனே ஓடியென் முன்வருவாய்!
தேடித்
திரிந்த திருவும் நானாவேன்.
சிவந்த அழகுமேனி
சேரத் துடிப்பாய்?
கனிந்த செவ்விதழில் காதல் படிக்கவா!




உனக்கென யான்செய்த ஒப்பனை காண்பாய்
எனக்கென பின்னே இருப்பது நல்விருந்து!
வாழ்வெல்லாம் சேர்ந்து கிடந்தே இறந்திடும்
போகச் சிறுநாகப் பூச்சிப் பிறவியோ?
சேருமுன் வால்களையே

சீராக நாமிணைத்து
வேறுபாடு ஏதுமின்றி
விருந்துக் கிணைந்திடுவோம்.
என்ன புதுமையின்பம், என்ன புதுமையின்பம்!

நானே அழகியதேளே, புவிமீது
நீயே எனை நாடும் நாதன் —....... நீயறிவாய்!
உன்வேலை தன்னை ஒருவாறு நீமுடிப்பாய்,
என்வேலை பின்னை இனிநான் செய்திடுவேன்.
ஆம்!

உனை உண்டு செரித்திடுவேன், வாவா! வா!
கோரப் பசி பசி!
வாரி யான் உண்ணவே
ஊறும் வாய் கண்டாயே,
உண்ண உணவாகு!
இதோ! என் வயிற்றுக்குள் வந்துவிட்டாய்! இன்பம்!
மெதுவாய் நகர்கின்றேன்
மேல்.
இணைய விட்டு என்றன் துணைதீர்த்துக் கட்டிய
இன்னமுதப் பெண்ணாவேன் நானே
வாழ வந்துவிடு!
என்னுடலின் மேல் இணைந்து
இன்பம் நீகண்டாயே ்,
பெண்ணமு துண்டாய்!
பெருமகிழ்வு நீகண்டாய்!
என் குடலுள் நீ வாழ
பசி!
காதல் மட்டும் எழுதுதற் கெளியது.
எளியதே எழுதி எழுதி
இனிய புகழே நாமே பெறலாம்!

எளியதென் றாலே என்ன கண்ணா?
எழுத எளியது
செய்யக் கடியது என்ன கண்ணா?
கண்டது கடிய தென்பார் அதுதான்
கண்ட தெல்லாம் கடியது
கடிய தெல்லாம் கடுமை யானது,
கடுமை என்பதே ஒருபெருங் கொடுமை.
ஆனால்
கண்ட தெல்லாம் கடிய தாயினும்
காதல் மட்டும் எளியது அன்றோ?
எதற்கோ எளியது? எழுதுவதற்கே!
காதல் மட்டும் எழுதுதற் கெளியது.

ஆயின்:
காதலை எழுதுவோம்; கருதுபுகழ் பெறுவோம்.
கவிகட் கெழுத எளியது காதல்.
காதலர் தமக்கோ செய்யக் கடியது.

காதல் காதல் என்று
கண்டபடி கட்டித் தழுவி
வழுக்கி விழுந்து
...........................................................

முழுக்கவிதையும் இங்கே உள்ளது.

(could not copy :  errors cropped up.)
formatting and colour code could not remove


சொடுக்கவும்.

https://bishyamala.wordpress.com/2007/03/19/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/

https://bishyamala.wordpress.com/2007/03/19/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.