Pages

செவ்வாய், 11 ஜூலை, 2017

Terror attack on Amarnath pilgrims.

யாத்திரையாய் அமர்நாத்து நோக்கிச் சென்றார்
யாதொன்றும் யார்க்கெனினும் தீங்கே இன்றி
ஈத்துவக்கும் நெஞ்சினராய் பேருந்  துக்குள்
இனிதாக  ஊர்ந்துகொண்டே இருந்த வேளை
கூர்த்தகொடு தீவிரவா தத்தோர் சுட்டுக்
கொலைசெய்தார் எழுவரையே பல்லோர் காயம்;
ஆர்த்தபிற பயணிகளும் அஞ்சா நெஞ்சில்
அற்றுவிடாப் பற்றுடனே தொடர்ந்து வென்றார்.

இதைச்செய்து முடித்துவிட்டால் காசு மீரம்
இம்மென்று வந்திடுமோ மூட நோக்கில்
பதைபதைக்கப் பலர்செத்த போதும் என்ன‌
பயனையா  பாரிலென்ன கைக்குள் சேரும்;
எதைஎதையோ செய்வதெலாம் ஏறிச் சொர்க்கம்
இயன்றிடவே செய்திடுமோ மூளைக் கேடே!
வதைசெய்து பாவத்தின் வாய்ப்பட் டார்க்கு
வாய்த்திடுமே எரிநரகே அரனே வாழ்க.



ஈத்துவக்கும் = ஈந்துவக்கும், கொடையால் மகிழும்.
இங்கு எதுகை நோக்கி வலித்தல்.

இம்மென்று =  உடனே.

அரனே = கடவுளே







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.