Pages

செவ்வாய், 6 ஜூன், 2017

வாயு. வாய் என்ற‌ தமிழ்ச்சொல்

வாயு என்ற சொல்லைக் கவனிப்போம்.

பேச்சு வழக்கில் வாயு (காற்று) என்ற சொல் வருவதில்லை
என்றாலும் "வாயுபகவான்" என்று குறிக்கும்போது, வாயு 
என்ற சொல் வருகிறதுவாயு என்பது காற்று.   வாயிலிருந்து
வெளிவரும் காற்றையே தொடக்கத்தில் தமிழர் வாயு 
என்றது தெரிகிறது. இது பின் காற்று என்ற‌ பொதுப்பொருளில்
 வழங்கிற்று. எனினும் செந்தமிழாகக் கருதப்படவில்லை.

நிலவியலார் இப்போது காற்று ஓர் இடத்திலிருந்து கிளம்புவது என்று
சொல்வர். எனவே இடத்திற் பிறப்பது வாயு. வாய் என்ற‌
தமிழ்ச்சொல் இடம் என்றும் பொருள்படுவதால், வாயு என்பது 
"இடத்தில் தோன்றுவது" என்று பொருள்விரிக்க வசதிதருகிற 
சொல் ஆகும்

தமிழ் ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் வழங்கிய மொழி என்பர் சில ஆய்வறிஞர். வாயு போலும் சொற்கள் எங்கும் வழங்குதல் காண்கையில் இஃது உண்மை என்றே அறிக. பிறமொழிகளிலும் இச்சொல் வழங்குவது தமிழின் பெருமைக்கு ஒரு சான்றாகும்.

Preview and edit not available.  We are just posting it. Read and enoy. Any errors will be
rectified later.  Sorry about this.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.