Pages

சனி, 13 மே, 2017

பல்கலையின் கணினிகளுள் புகுந்துவிட்டார்............

இணையத்தில் கள்வர்கள் அலைகின் றார்கள்
எங்காவ துடைத்துள்ளே புகலாம் என்று!.
நனையத்தான் வேண்டுமடி மழையே வந்தால்!
நல்லவெயில் என்பதென்றும் எரிவ தில்லை.
வினையைத்தான் ஏற்போரும் கணினி கட்குள்
வேண்டியவா றேநுழைந்து விளையாட் டுற்றார்.
தினையேனும்    நீங்காத திறத்தில் நின்றார்
திருடாரே.திறமபலிலை அறமே,  உண்மை.

பல்கலையின் கணினிகளுள் புகுந்துவிட்டார்!
பகர்ந்தேனே பலதிருடர்...உணர்ந்து கொள்வீர்.

அச்சுப் பிழை திருத்தப்பட்டுள்ளது.


தினையேனும்  =  தினை நீங்கினால்   தானியத் தொகை குறையும். நற்குணங்களில்  திருடாமை என்னும் ஒன்று குறைந்தாலும்,  அறத்தின் திறம்  அவர்மாட்டுக் குறைவுபடும் என்றவாறு.

பல்கலை என்றது  பல்கலைக் கழகத்தை.

இன்றைய சிங்கை நாளிதழ்கள்  செய்தி  காண்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.