Pages

ஞாயிறு, 21 மே, 2017

எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்தால்....................

முந்தாநாள் காலை நேரம் வீட்டிலிருந்தேன். அப்போது இரண்டு இந்தியர்கள் வீட்டின்முன் வந்தனர். ஒருவர் கத்தி
வைத்திருந்ததுபோல் தெரிகிறது. நான் வெளியில் செல்லாததனால்  தப்பித்தேன். வெளியில்  சென்று என்னவென்று கேட்டால் அணிந்திருந்த சங்கிலி பறிபோவதுடன்  கதவைத் திறந்துகொண்டு வெளியில் செல்லவேண்டுமென்பதால்,  அப்போது அவர்கள் வீட்டுக்குள்
நுழைந்துவிடலாம் அல்லவா?

ஆகவே அவர்களை  உள்ளிருந்தபடியே கவனித்துக்கொண்டு காவல் துறையை அழைத்துவிட்டேன்.  இந்த இருவரும் பார்த்தா ர்கள்.

கதவைத் திறக்கச் செய்யவேண்டுமே!   ஆகவே வீட்டின் முன் வளர்ந்திருந்த    வேப்பமரத்தின் கொம்புகளை வெட்டினார்கள். அப்போதும்
யாரும் வெளியில் செல்லவில்லை. அதற்குள் காவல்துறையினர் வந்துவிட்டதால், அப்புறம் நடந்ததை அவர்கள் விசாரித்தார்கள்.

இதுபோன்று செய்வோர் பலரும் திருடர்கள். எல்லோரும்
வீட்டுக்குள்ளேயே இருந்தால் அவர்களுக்குப் பிழைப்பு ஓடவில்லை.  ஆளிருக்கும்போது உடைத்துக்கொண்டு உள்ளே செல்வதென்பதும் அவர்களுக்கு இயலாது. ஆகவேதான் இந்தத் தந்திரம்
கையாளப்படுகிறது.

ஒரு சாவு வீட்டுக்குப் பூமாலை உட்பட  வே ண்டிய பொருட்களுடன் சென்று, பிணத்துக்குக்  கும்பிடு போட்டுவிட்டு,  அங்கிருந்த பெண்மணிகள் ஆடவர்கள்
ஆகியோரின் நகை, பணம் முதலியவற்றைப் பிடுங்கிக்க்ண்டு போன திருடர்களும் இருக்கிறார்கள்.

will edit


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.