Pages

புதன், 12 ஏப்ரல், 2017

சாமி நாத அய்யரும் சமயக் காழ்ப்புணர்வும்

இப்போதெல்லாம், இந்துக் கோயில்களில் சிவனுக்கு உபயம் செய்கிறவரே
விட்ணுவுக்கும் மாலை அணிவித்து வணங்குவதைக் காண்கிறோம். இவர்
சிவ வணக்கம் செய்பவர், இவர் விட்ணு வணக்கம் செய்பவர் என்று பேதப்படுத்துவதில்லை. (பெயர்தல்> பே> பேதம்).

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பேதம் தலைதெறிக்க எழுந்து நின்றது. சிவனைப் பாராட்டிய வாழ்த்து நூல் தொடக்கத்திலிருந்தால், அதை
நீக்கிவிட்டு, விட்ணு பாடல் எழுதி நூலை அச்சிட்டனர். பழம்பாடலை வீசுவதால், அதிலுள்ள சொல்வளம் அறியாதவர்கள் ஆவோம்; வரலாறு தொலையும்; உண்மை அறியார் ஆவோம் என்று நினைத்தனரில்லை. புதுப்பாடலைப் பழம்பாடல் போல் முன்வைப்பது ஓர் ஏமாற்று என்பதையும் அவர்கள் உணர்ந்தனரில்லை. ஆசிரியர்களும் வேறு மதத்தாருக்குப் பாடம் ஓத மறுத்தனர்.

இப்படியேதான், சாமிநாத ஐயருக்கு, மீனாட்சி சுந்தரனார் பாடம்சொல்ல‌
மறுத்துவிட்டார். அப்புறம் வெங்கட்ராமன் என்ற அவருடைய வைணவப்
பெயரைச் சாமிநாதன் என்று மாற்றி, சிவமதத்தவரானபின், முறைப்படி
மாணவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இல்லாததனால், பல நூல்களும் கைவிடப்
பட்டன. அவை அழிந்தன.

இவை நிகழாமல் இருந்திருந்தால், நமக்கு இப்போது பல சான்றுகளும்
கிடைத்து நம் ஆய்வுகள் உயர்ந்து நிற்கும் என்பது காண்க.

சாமி நாத அய்யரும்  சமயக் காழ்ப்புணர்வும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.