Pages

திங்கள், 19 டிசம்பர், 2016

உள் விகுதி பெற்ற சொற்கள்.



உள் என்பது ஒரு சொல்லில் இறுதிநிலையாக அல்லது விகுதியாய்
வரும். யாவரும் அறிந்த சொல் "கடவுள்" என்பது. கட என்பது பகுதி. அதனோடு உள் சேர்ந்து கடவுள் ஆயிற்று.

ஆற்றிலேதான் தூண்டில் போட்டு
அதிலே ஒரு மீன் பிடித்து
அரைவயிற்றுக் கஞ்சிக்காகும் கடவுளே!

என்ற கலைவாணரின் பாட்டில் கடவுள் என்ற  சொல் நன்கு பயன்பட்டுள்ளது.

ஆயுள் என்ற சொல்லிலும் உள் விகுதி உள்ளது.  ஆ= ஆவது.  அதாவது உயிருடன் இருப்பது. ஆவது உண்டாவதும் குறிக்கும்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

என்ற பழமொழியில்  ஆவது  உயிருடன் வாழ்தல் குறித்தது. பிறத்தலும் குறிக்கும்.  ஆயுள் பின் ஆயுசு என்று பேச்சில் திரிந்தது.

உள் விகுதி பெற்ற சொறகள் பல. இங்கு பட்டியலிட முற்படவில்லை.
ஒன்றை மட்டும் கவனிப்போம்.

விக்குள் என்பதே அது. இது விக்கல் எனவும் படும்.

விக்குதல் : பட்டுக்கொள்ளுதல், நின்றுபோய் மாட்டிக்கொள்ளுதல்
குறிக்கும்.  இது உள் விகுதி பெற்று,  விக்குள் என்றும் வரும்.

விக்குதல் ‍ தடைப்ப்படுதல். விக்கினம் என்ற சொல், விக்கு+ இனம்=
விக்கினமாயிற்று.  விக்குதல் என்ற சொல்லிலிருந்து இதைத் தொலைவுப்படுத்த அது >"விக்ன" எனச் சுருங்கிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.