Pages

சனி, 10 டிசம்பர், 2016

தனிக்கட்டை வாழ்வினரும்

தனிக்கட்டை  வாழ்வினரும் கொலைப்பட்டே வீழ்வது
தாரணியிற்  புதிதாமோ  யாருமறி  நிகழ்வது!
பனிக்கட்டி வீழ்ந்ததில் பயணித்தார் மேலுலகம்
பணிசெய்து யர்ந்தோரும் பரவினார் பரனுலகம்
இனிக்கெட்டுப் போவதுவோ  இங்கொன்றும் இல்லையடி
இலதேதான் உளதாகும் உளதேதான் இலதாகும்
உனைக்கட்டிப் பிடித்தானும் உய்வதுவும் அவண்தானே
எனைத்திட்டி மகிழ்ந்தானும் எங்குவேறு சொல்வாய்நீ

ஈடற்ற  இணைபிரியா  இன்பத்துத்  தோழியெங்கே
ஈண்டிருந்து செல்கையிலே எங்குசென் றவள்காண்பேன்?
ஆடற்ற கொட்டகைக்குள் அவள்தனியே நான்வெளியே
ஆறுதலைத் தேடுவளோ அழுதுபுலம் பிடுவாளோ
கேடற்ற இடமில்லை கேடென்றும் யாதுமில்லை
கெடுதலொடு படுதலுமே கெடுமாந்தன் உடுதலையில்
வாடென்று வற்றினனோ வாழ்விதுவே வெற்றடையே
வாய்மையுணர் வெய்துவளோ   வாழ்வினிதே யாவினுமே

There was an unexpected blackout at the time of posting.  Some errors have now been
rectified at 6,54 pm.  Shall review autocorrect changes later.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.