Pages

வியாழன், 24 நவம்பர், 2016

நாடறிந்த யமனிவனை.....

பொசுக்கென்று போனதுயிர் என்று சொல்வாய்;
போனதற்கோர் காரணமும் கண்டு சொல்வாய்;
கொசுக்கடியோ கேட்டறியத்  தப்பொன் றில்லை;
கூடிவரும் இமைகளுக்குக்  கேடே  செய்ய
விசுக்கென்று பறந்துவந்து விங்ஙீ   என்று
விரைந்தொலியோ டகல்கின்ற கூர்த்த பல்லன்
நசுக்கடியாய் இயலாதே கொல்வ தற்கும்
நாடறிந்த யமனிவனைக் கட்டுள் வையே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.