Pages

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

Manu and his edicts மனுவின் திறமை

மக்கள் குலங்களாக வாழத் தலைப்பட்ட பிறகு பெரும்பாலும் தம் குலத்துக்குள்ளேயே  ஒரு பெண்ணைப் பார்த்துப் பையனுக்குத் திருமணம் செய்துவைத்தார்கள். ஏன் வேறு குலத்தில் பெண் எடுக்கவில்லை?

ஒரு குயவனார் வீட்டுப் பெண்ணை ஒரு வண்ணார் வீட்டினர் எடுக்கலாம்.
சங்க காலத்தில் என்று வைத்துக்கொள்வோம்.  வண்ணார் வீட்டில் வாழ்க்கைப் பட்டபின், குயவப் பெண் ஆற்றில் துணி தோய்க்கப் போகவேண்டும்; வெயிலில் நிற்கவேண்டும்; துணி தோய்க்கத் தெரியவும் வேண்டும்,

குயவ அப்பன் சொல்கிறார்: என் பெண் வீட்டுக்குள்ளேயே இருந்து பழக்கம்.
ஆற்றுப் பக்கம் ஏரிப்பக்கமெல்லாம் போய் இடர்ப்பட அவளுக்கு முடியாது. ஏரிப்பக்கம் நிற்கும் எருமை முட்டவந்தால்  அவளுக்குக் காலும் ஓடாது;கையும் ஓடாது. பேசாமல் இன்னொரு குயவப் பையனையே பார்த்துவிடலாம் என்கிறார்.

இதுபோன்று பல காரணங்கள் இருந்து, முடிவுகள் மேற்கொள்ளப்   பட்டிருக்கலாம். இத்தகைய காரணங்கள் இப்போது இல்லாத வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட இக்காலத்திலும்  பழக்க வழக்கங்கள் இன்னும் மாறவில்லை.

மனு என்பவன் இது இறுகிய விதிமுறையோல் ஆகிவிட்ட
காலத்தில்வந்து பார்த்து, இதை அவன் செய்த விதிபோல்
எழுதிவைத்தான்,இவை போன்ற நிலைகளை அவன்
உருவாக்க அவனுக்குத் திறம்இருந்திருக்க வாய்ப்பில்லை.
Some paragraphs could not be justified whilst posting.


மனுவின் திறமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.