Pages

வெள்ளி, 17 ஜூன், 2016

வெள்ளைப் பெண்ணால் வந்த வேதனை

இன்று சங்ககாலப் புலவர் சத்திநாதனாரின் சிந்தனையூட்டும் ஒரு சிறு பாடலைக் குறுந்தொகை என்னும் நூலிலிருந்து பாடி இன்புறலாமே!

இந்தப் பாடல் கூறுவது ஆண்மை மிக்க ஓர் இளைஞனைப் பற்றியது. இவனொரு வெள்ளை நிறமுள்ள அழகிய பெண்ணைக் கண்டான். இவள் உயர்ந்த குடிப்பிறப்பு உடையவள் என்பது பாடலிலிருந்து போதருகின்றது.
அழகான இதழ்கள்; இளம்பிறை போலும் எயிறுகள். மயக்கும் இளமுறுவல்.
இத்தனையும் இன்னும் பல் கவின்களும் உடையாள் இவள்.

இவளை எதிர்கொண்டு நட்புற்று அணுக்கமானபின் இந்த இளைஞன் முன்போல் தெளிவாக இல்லை.  ஏதோ இவனைப் பற்றிக்கொண்டது போல‌
அதனால் இவன் தடுமாறித் திரிந்துகொண்டிருந்தான். இதைக் கவனித்து இவனைக் கேட்க, இவன் கூறினான்:  ஓரு வெள்ளைக் குட்டிப் பாம்பு என்னைக் கடித்துவிட்டது; அதனால் துன்பத்தில் வீழ்ந்துவிட்டேன் என்று,
பெண்ணைக் குட்டிப் பாம்பு என்று இவன் கூறியதனால்  இவள் ஒரு பதின்ம அகவைப் பெண் என்பது பெறப்படுகிறது.

இனிப் பாடலுக்கு வருவோம்.

தொடரும்

வெள்ளைப் பெண்ணால்  வந்த வேதனை   will continue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.