Pages

வியாழன், 19 மே, 2016

To take over a State Administration

இன்னொரு கட்சி  ஆட்சி புரிந்து கொண்டிருந்த ஒரு மாநிலத்தை  நாம் எண்ணிகொண்டிருக்கும்  மற்றொரு கட்சி போய்  அக்கட்சியை அகற்றிவிட்டு  நிறுவாகத்தை  மேற்கொள்வதென்பது மிகுந்த கடினமான வேலை என்று சொல்ல வேண்டியுள்ளது .  அதிலும் அந்த நிறுவாகம் நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தால் அதை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில்  செலுத்துவ தென்பது மிக மிகக் கடினமென்றுதான்   சொல்லத் தோன்றுகிறது .

புஷ் அரசிலிருந்து விலகும்போது  பொருளியல் நிலை நன்றாக இல்லை.  ஒபாமா அதை மேற்கொண்டபோது  அதற்கு  அவர்  பாடுபட  வேண்டியிருந்தது .

நடந்து முடிந்த தேர்தலுக்கு முன் கிடைத்த சில செய்திகளைப் பார்த்தால் தமிழ் நாடு  அரசு இப்படி நட்டத்தில் ஓடிக் கொண்டிருந்தது என்று தெரிகிறது .
மற்றொரு கட்சி போய் அங்கு அமர்ந்தால் நிதி நிறுவாகத்தை  சரிப்படுத்த வேண்டிவரும்,  அதற்குப் பணம் வேண்டுமென்றால் கடன் வாங்க வேண்டும் அல்லது  வரிகளை உயர்த்த வேண்டும் அல்லது  வேறுவகைகளில் பணத்தைத் தேடவேண்டும்,

ஆகவே  மற்றொரு கட்சி வராமற் போனது  அந்த வராத கட்சிக்குத்  தலைவலி  குறைவு என்று சொல்லத் தோன்றுகிறது.   அந்த இடத்தில் போய்  அமராத காரணத்தினால்  அந்தச் சுமை இல்லையாகிவிட்டதன்றோ ?

இதில் வியப்பு என்னவென்றால்  அந்த  எரியும் நாற்காலியில் போய்  அமருவதற்கு  பல கட்சிகள் முண்டியடித்துக் கொண்டு  ஓடுவதுதான்.  ஏன்
இவர்கள்  ஓடுகிறார்கள் ?    ஆட்சி  முடிந்தபின்  இறங்கிவிடும்  நிலையில்  இதை ஏன்  செய்ய வில்லை  அதை ஏன் முடிக்கவில்லை  என்று
யாரும் கட்டிப்போட்டு  அடிப்பதில்லை !  அதனால் விரும்பி  அங்கு செல்ல முனைவோர்  அதிகமாகவே உள்ளனர் .

இதை அறிந்த மக்கள்  வெகு கவனமாகவே  அன்புமணி, விஜயகாந்த்  முதலியவர்களைத் தேர்வு செய்ய வில்லை என்று சொல்லப்படுகிறது.

 .
,


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.