Pages

வியாழன், 14 ஏப்ரல், 2016

இடையில் யகர ஒற்றுக் கெடுதல்

இதனையும் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தாதி தாதிமார் என்ற சொல் எங்ஙனம்  அமைந்தது?

தாதி என்ற சொல்லின் முந்து வடிவம் தாய் என்பதே.  அது தி என்ற சொல்லாக்க விகுதி புணர்த்தப்பட்டுள்ளது.

தாய் + தி =  தாய்தி  >  தாதி.

எனவே யகர ஒற்று மறைந்தது.

சொற் புனைவில் இது இயல்பு.   எடுத்துக்காட்டாக:

வாய்+ தி >  வாய்த்தி  > வாத்தி
வாய் பாடம் படித்துக் கொடுப்பவர் .

பணிவுப் பன்மை ஆர் விகுதி பெற்று:

வாத்தியார்  ஆகிறது.

உப + அத்தியாயி  =  உபாத்தியாயி , உபாத்தியாய  என்ற சமஸ்கிருதம்
வேறு  என்பதை முன் விளக்கியதுண்டு.  ஆங்குக் காண்க.

தேய்+கு +அம்  = தேய்கம் >  தேகம்  ( அழிதலை உடைய உடல் )

உய்த்தல்
உய் + த் + இ =  உய்த்தி  > உத்தி  >  (யுக்தி )  உய்த்துணரப்படுவது .


continue reading next relevant post:
  http://sivamaalaa.blogspot.com/2016/04/blog-post_16.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.