Pages

ஞாயிறு, 13 மார்ச், 2016

தத்துவம் என்ற சொல்லை............

இன்று தத்துவம் என்ற சொல்லை அலசுவோம்.

இது தத் + துவம் என்று பிரித்தற்குரியது போல் தோன்றுகிறது. என்றாலும் உண்மை அதுவன்று.

இதில் தத் என்பது தன் என்பதன்  (புணர்ச்சித்)  திரிபு.

தன் என்பது கடைக்குறைந்தால் த என்று  னகர ஒற்று இழந்தியலும்.

ஆகவே த = தன் என்றுணரற்பாற்று.

அத்து என்பது சாரியை. இந்தச் சாரியை, தன் தலையை இழக்க து என்று மட்டும் மிஞ்சி நிற்கும். அன்றி அஃறிணை  ஒன்றன்பால் விகுதியும் இதுவாகும்.  அது இது என்பன வந்த சொற்களை முன்பு
விளக்கியிருந்தோம்.  அத்து என்பது உண்மையில் அது என்பதில் து
இரட்டித்த நிலையே.  அது > அத்து.   சாரியையாய் உருவெடுத்த அத்து அது என்பதனின்று தோன்றியதே.

இறுதி நிலை  ‍அம் என்பது.  இஃது விகுதி.

த + து + அம் = தத்துவம் ஆயிற்று.

தத்துவமாவது பிற சார்பின்றித் தானே நின்றியலும் ஒரு கொள்கை,வரைவு, உள்ளீடு, தன்மை, பொருளின் தன்மை


தன் என்ற சொல்லடிப் பிறந்ததால்,  இது எளிதின் உண‌ரற்பாலதே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.