முன் இடுகை:http://sivamaalaa.blogspot.sg/2016/01/5.html
சிவஞான போதம் ஐந்தாம் பாடற் பொருளை இப்போது அறிந்து மகிழ்வோம்.
விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
அளந்தறிந்து அறியா ஆங்கவை போல
தாம் தம் உணர்வில் தமியருள்
கா ந்தங் கண்ட பசாசத்து அவையே ,
விளம்பிய உள்ளத்து - முன் சொன்ன உடற்கண் உள்ளதாகிய உயிரால்;
உள்ள அத்து = உள்ள அது = உள்ள (உயிர்) காரணமாக; அது என்பது உயிரைச் சுட்டியது.
இங்கு அது என்பது அத்து என்று இரட்டித்து நின்றது.
மெய்வாய் கண் மூக்கு செவி : ( இங்கு கூறிய ) ஐந்து புலன்களும்
அளந்து - அளவிட்டு;
அறிந்து - தெரிந்து (கொள்ளுமென்றாலும்)
அறியா - உண்மையில் அவை தாமே எதையும் அறியவில்லை;
ஆங்கு அவை போல - அந்த ஐம்புலன்களும் தாமே அறிதல் போலும் தோற்றத்தை உண்டாக்கி ;
தம் தமி அருள் - தம் தம்மில் ஒன்றாயிருக்கும் சிவத்தின் அருளினால்;; (அறிதல் நடைபெறுகின்றது )
தமி = தமித்து இயங்கும் சிவம்; வேறோர் ஆற்றலின் துணையின்றி இயங்கும் . இறைவன்;
காந்தம் கண்ட பசாசத்து = காந்தத்தை அணுகிய இரும்பு போல ஐம்புலன்களுக்கும் அவ்வாற்றல் வந்து சேர்ந்து இயக்கத்தையும் உணர் ஆற்றலையும் அளிக்கும் தன்மை அதுவாகும்,
பசாசம் - இரும்பு. அது, பசாசம் > பசாசம் அத்து என்று இரட்டித்தது.
பசாசம் அதுவாகும் என்றபடி
.பசாசம் - இச்சொல் பைசாசம் @ என்றும் வழங்கும். பச்சை இரும்பு என்ற வழக்கும் உள்ளது. இரும்பு வேலைக்காரனால் அடித்துச் செய்யப்படாத இரும்பை இது குறிக்கும். பசுமை + அசம் = பசாசம் . மை விகுதி கெட்டு சகரம் நீண்டது. அயம் ( இரும்பு ) > அசம் யகரம் - சகரமாய்த் திரிந்தது. நேயம் > நேசம் போல.
@ பசாசம் - பைசாசம் இது பசுந்தமிழ் > பைந்தமிழ் போன்ற திரிபு. ( பிசாசு - பைசாசம் என்பது வேறு . குழம்பலாகாது. )
காந்தம் < காந்தி இழுத்தல் . காந்துதல் அதன் இழுப்பு ஆற்றலைக் குறித்தது. தீயினால் காந்துதலோடு ஒப்பிட்டு ச் சொல் அமைந்துள்ளது.
சோற்றுப்பானை சூடேறிச் சோறு காந்தும்போது உள் அடியில் சோறு ஒட்டிக் கொள்கிறது, இதையறிந்த தமிழர் , இழுக்கும் இரும்பிலும் உட்சூடு
இருக்குமென்று எண்ணி அதைக் காந்தம் ( காந்து + அம ) என்றனர். இரும்புத் துண்டுகளை உரசினால் சூடு ஏறும்; கூடினால் பொறிகூடப் பறக்கும். ஊர்மக்கட்கும் கருமகற்கும் இது போதுமே!
Some changes in the commentary text were noticed and corrected. Anti-Virus facility warned that some add-ons are making unintended changes.
சிவஞான போதம் ஐந்தாம் பாடற் பொருளை இப்போது அறிந்து மகிழ்வோம்.
விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
அளந்தறிந்து அறியா ஆங்கவை போல
தாம் தம் உணர்வில் தமியருள்
கா ந்தங் கண்ட பசாசத்து அவையே ,
விளம்பிய உள்ளத்து - முன் சொன்ன உடற்கண் உள்ளதாகிய உயிரால்;
உள்ள அத்து = உள்ள அது = உள்ள (உயிர்) காரணமாக; அது என்பது உயிரைச் சுட்டியது.
இங்கு அது என்பது அத்து என்று இரட்டித்து நின்றது.
மெய்வாய் கண் மூக்கு செவி : ( இங்கு கூறிய ) ஐந்து புலன்களும்
அளந்து - அளவிட்டு;
அறிந்து - தெரிந்து (கொள்ளுமென்றாலும்)
அறியா - உண்மையில் அவை தாமே எதையும் அறியவில்லை;
ஆங்கு அவை போல - அந்த ஐம்புலன்களும் தாமே அறிதல் போலும் தோற்றத்தை உண்டாக்கி ;
தம் தமி அருள் - தம் தம்மில் ஒன்றாயிருக்கும் சிவத்தின் அருளினால்;; (அறிதல் நடைபெறுகின்றது )
தமி = தமித்து இயங்கும் சிவம்; வேறோர் ஆற்றலின் துணையின்றி இயங்கும் . இறைவன்;
காந்தம் கண்ட பசாசத்து = காந்தத்தை அணுகிய இரும்பு போல ஐம்புலன்களுக்கும் அவ்வாற்றல் வந்து சேர்ந்து இயக்கத்தையும் உணர் ஆற்றலையும் அளிக்கும் தன்மை அதுவாகும்,
பசாசம் - இரும்பு. அது, பசாசம் > பசாசம் அத்து என்று இரட்டித்தது.
பசாசம் அதுவாகும் என்றபடி
.பசாசம் - இச்சொல் பைசாசம் @ என்றும் வழங்கும். பச்சை இரும்பு என்ற வழக்கும் உள்ளது. இரும்பு வேலைக்காரனால் அடித்துச் செய்யப்படாத இரும்பை இது குறிக்கும். பசுமை + அசம் = பசாசம் . மை விகுதி கெட்டு சகரம் நீண்டது. அயம் ( இரும்பு ) > அசம் யகரம் - சகரமாய்த் திரிந்தது. நேயம் > நேசம் போல.
@ பசாசம் - பைசாசம் இது பசுந்தமிழ் > பைந்தமிழ் போன்ற திரிபு. ( பிசாசு - பைசாசம் என்பது வேறு . குழம்பலாகாது. )
காந்தம் < காந்தி இழுத்தல் . காந்துதல் அதன் இழுப்பு ஆற்றலைக் குறித்தது. தீயினால் காந்துதலோடு ஒப்பிட்டு ச் சொல் அமைந்துள்ளது.
சோற்றுப்பானை சூடேறிச் சோறு காந்தும்போது உள் அடியில் சோறு ஒட்டிக் கொள்கிறது, இதையறிந்த தமிழர் , இழுக்கும் இரும்பிலும் உட்சூடு
இருக்குமென்று எண்ணி அதைக் காந்தம் ( காந்து + அம ) என்றனர். இரும்புத் துண்டுகளை உரசினால் சூடு ஏறும்; கூடினால் பொறிகூடப் பறக்கும். ஊர்மக்கட்கும் கருமகற்கும் இது போதுமே!
Some changes in the commentary text were noticed and corrected. Anti-Virus facility warned that some add-ons are making unintended changes.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.