Pages

செவ்வாய், 10 நவம்பர், 2015

vAlmiki and his mother tongue,

இந்தப் பெயர்களைப் பாருங்கள்:

இர்  >  இராமர் >  ராமர்.
இர் >   இரா வண்ணன் > இராவணன் >  ராவணன்.
விழு + பீடு + அணன் >  வி + பீடணன் = விபீடணன்.>  விபீஷணன் 
கை கேசம் இ  > கைகேசி >< கைகேயி.
ஆழ்ந்த நேயம் >  ஆழ்ந்தநேயர் >  ஆஞ்சனேயா
ஆய்ந்த நேயர் > ஆஞ்ச நேயர்  என்றும் வரும்,  
ஆய்ந்த =  தேர்ந்தெடுத்த;  "  ஆய்மயில் கொல்லோ?":  குறள். 
மரை  ​+ ஈசன் =  மரையீசன் >  மாரீசன்   ;  மரை -  என்பது மான்  தமிழ்.
இறைவர் >  இஷ்வர் > ஈஷ்வர் > ஈசர் /  ஈசன் 

காட்டு வாசியான வால்மீகி  பிராமணர் அல்லர் .  பால்மீகி >  வால்மீகி  என்பது  ஒரு  தாழ்ந்த சாதியின் பெயர்,   அன்று உயர்வானவர்களாய்  இருந்தனர்!?  இதில்  நமக்குக் கவலை இல்லை.  அவர் என்ன மொழி பேசினார்?   சமஸ்கிருதம்  பேசினர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  சமஸ்கிருதத்தை  அவர்தம் காட்டுவாசிக் குடும்பம் பேசியதா?

அண்மைக் காலம்வரை பல்வேறு  திராவிட மொழிகள் வட இந்தியாவில் வழங்கி  வந்தன.  இவை பலுச்சிஸ்தானம் வரை நீண்டு வழங்கின.  எழுத்து  இல்லாத மொழிகள்.  அவற்றுள் பல அழிந்தன.  1970ல் வழங்கின  சில 
இப்போது  இல்லாதொழிந்தன .

இந்த ஆதிப்புலவர் எந்த மொழியில் எழுதினார்?   சம்ஸ்கிருதத்துக்கு அப்போது  எழுத்துக்கள் இல்லையே!.

ஏன் தமிழில் பிரிக்க,  பொருள் கிடைக்கிறது?

இவற்றைக்  கண்டு  தெரிவிக்கவும்.    
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.