புலவர் என்ற சொல் புலம் + அர் என்றமைந்த சொல்லாகும் .
புலம் என்பது காட்சி என்றும் பொருள்படும். கட்புலம் அதாவது கண்ணின் காட்சி அல்லது காட்சித்திறன், அதுபோல் செவிப்புலம் என்றும் அமையும் ,
புலம் என்பது புலன் என்றும் வரும். இது போல வருதலின் போலி எனப்படும்,
அதாவது புலம் என்ற சொல்லில் மகர ஒற்று வந்ததுபோல் னகர ஒற்று வந்து அதே சொல்லாய்ப் பொருளோடு அமையும். புலன் எ-டு : ஐம்புலன், மெய்ப்புலன் .
புலம் என்ற சொல் புல் என்ற சொல்லிற் பிறந்தது. புல்லுதல் என்றால் பொருந்துதல். காணும் திறன் உள்ள கண்ணோடு காணப்படும் பொருள் சென்று ஒளியால் பொருந்துகிறது. ஆகவே புல் > புலம் ஆயிற்று .
புலம் + அர் என்பதில் மகர ஒற்று மறைந்து புல+ அர் என்றாகி வகர உடம்படு மெய் தோன்றிப் புலவர் என்று சொல் அமைந்தது. அர் விகுதி சேர்க்காமல் ஓர் என்பதைப் போட்டால் புலவோர் என்று வரும். இரண்டும் ஒன்றுதான் .
புலவர் என்பது இப்போது பணிவுப் பன்மையில் (மரியாதை ) வருவதால்
இக்காலத்தில் கள் விகுதி சேர்த்துப் புலவர்கள் என்றாலே பன்மையாகிறது,
ஆனால் ஓர் விகுதி "கள்" இல்லாமல் பன்மை காட்ட வல்லது. ஆகையால் மறைமலையடிகள் " முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் " என்று தம் நூலொன்றுக்குப் பெயரிட்டார்.
புலவர் என்பது புலவு + அர் என்றும் பிரியும் ; அப்போது புலால் உண்பவர்கள்
என்றும் பொருள் தரும், புலவு = புலால் , இறைச்சி .
வடபுலவர் என்று வரும் கூட்டுச் சொல்லில் வடதிசையில் உள்ள மக்கள்;
வட திசையில் உள்ள புலவர்கள் ; வடக்கே புலால் உண்போர் என்று மூன்று விதமாகப் பொருள் கொள்ளலாம்; காரணம் புலம் என்பது இடம் என்றும் பொருள் ஏற்கும் சொல்.இடம் நோக்கிப் பொருள் கொள்க. மயக்கம் இன்றிப் பொருள் வரவேண்டுமானால் வடபுலத்தார் தென்புலத்தார் என்று இடம் சுட்டுவது நன்று புலம் பெயர்ந்த மக்கள் என்ற தொடரையும் நோக்கவும் , புலவு என்பது இறைச்சி அல்லது புலால் என்றும் பொருள் கூட்டுவது
ஔவைப்பாட்டி
"புலவு நாறும் என் தலை தைவரு மன்னே" என்று புற நானூற்றில் கையறு நிலையில் ாடுதல் காண்க.
browser collapsed will edit later
புலம் என்பது காட்சி என்றும் பொருள்படும். கட்புலம் அதாவது கண்ணின் காட்சி அல்லது காட்சித்திறன், அதுபோல் செவிப்புலம் என்றும் அமையும் ,
புலம் என்பது புலன் என்றும் வரும். இது போல வருதலின் போலி எனப்படும்,
அதாவது புலம் என்ற சொல்லில் மகர ஒற்று வந்ததுபோல் னகர ஒற்று வந்து அதே சொல்லாய்ப் பொருளோடு அமையும். புலன் எ-டு : ஐம்புலன், மெய்ப்புலன் .
புலம் என்ற சொல் புல் என்ற சொல்லிற் பிறந்தது. புல்லுதல் என்றால் பொருந்துதல். காணும் திறன் உள்ள கண்ணோடு காணப்படும் பொருள் சென்று ஒளியால் பொருந்துகிறது. ஆகவே புல் > புலம் ஆயிற்று .
புலம் + அர் என்பதில் மகர ஒற்று மறைந்து புல+ அர் என்றாகி வகர உடம்படு மெய் தோன்றிப் புலவர் என்று சொல் அமைந்தது. அர் விகுதி சேர்க்காமல் ஓர் என்பதைப் போட்டால் புலவோர் என்று வரும். இரண்டும் ஒன்றுதான் .
புலவர் என்பது இப்போது பணிவுப் பன்மையில் (மரியாதை ) வருவதால்
இக்காலத்தில் கள் விகுதி சேர்த்துப் புலவர்கள் என்றாலே பன்மையாகிறது,
ஆனால் ஓர் விகுதி "கள்" இல்லாமல் பன்மை காட்ட வல்லது. ஆகையால் மறைமலையடிகள் " முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர் " என்று தம் நூலொன்றுக்குப் பெயரிட்டார்.
புலவர் என்பது புலவு + அர் என்றும் பிரியும் ; அப்போது புலால் உண்பவர்கள்
என்றும் பொருள் தரும், புலவு = புலால் , இறைச்சி .
வடபுலவர் என்று வரும் கூட்டுச் சொல்லில் வடதிசையில் உள்ள மக்கள்;
வட திசையில் உள்ள புலவர்கள் ; வடக்கே புலால் உண்போர் என்று மூன்று விதமாகப் பொருள் கொள்ளலாம்; காரணம் புலம் என்பது இடம் என்றும் பொருள் ஏற்கும் சொல்.இடம் நோக்கிப் பொருள் கொள்க. மயக்கம் இன்றிப் பொருள் வரவேண்டுமானால் வடபுலத்தார் தென்புலத்தார் என்று இடம் சுட்டுவது நன்று புலம் பெயர்ந்த மக்கள் என்ற தொடரையும் நோக்கவும் , புலவு என்பது இறைச்சி அல்லது புலால் என்றும் பொருள் கூட்டுவது
ஔவைப்பாட்டி
"புலவு நாறும் என் தலை தைவரு மன்னே" என்று புற நானூற்றில் கையறு நிலையில் ாடுதல் காண்க.
browser collapsed will edit later
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.