Pages

செவ்வாய், 20 அக்டோபர், 2015

மரத்தடி two meanings

சில சொற்களை இரு வகையாகவோ  அதற்கும் மேலாகவோ பிரிக்கலாம். இருவேறு பொருள்கொள்ள இத்தகைய சொற்கள் இடம்தரும்.இத்தகு சொற்கள்ளையும் தொடர்களையும் தேர்ந்தெடுத்து  அவற்றைச்  செய்யுட்களில் அமைத்துக் கவிபாடிக் காலம் கழித்தோரும் உளர்.

இப்போது அத்தகைய ஒரு சொல்லைக் கவனிப்போம்.

சொல்:   மரத்தடி.

 மரக்கிளைகளுக்குக் கீழுள்ள  தரைப் பகுதியைக் குறிப்பது. இது:

மரம் + அத்து + அடி   =   மரத்தடி.

இதில் வரும் "அத்து"  சாரியை.   முன் உள்ள சொல்லையும் பின் வந்த சொல்லையும்  சார்ந்தும்  அவற்றுடன் இயைந்தும் வருதலால்,  "சார்+இயை " = சாரியை எனப்பட்டது,  

சாரியைக்குத் தனிப் பொருளேதும் கூறப்படாது.   எனினும்  "து"  என்பது  உரியது  எனக் கொள்ளுதல் கூடும்.

இதை விரிக்காமல் விடுவோம்.

இனி,

மரம் +  தடி =   மரத்தடி  \\\

அம்  குறைந்து அல்லது மகர ஒற்றுக் குறைந்து,   தகர ஒற்றுத் தோன்றியது. 

கொஞ்சம் நீண்ட  மரக்கட்டை  என்று பொருள்.   சிறிது தடித்ததாயும் இருக்கவேண்டும்.   மெல்லியது  "குச்சி " என்பர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.