Pages

வியாழன், 10 செப்டம்பர், 2015

what is paavam?

தமிழுக்கே சிறப்பாக உரியது  ழகரம் ஆகும்.  தமிழின் உடன்பிறப்பாகிய மலையாளத்திலும்  அது  தனித்தன்மை பெற்று இலங்குகிறது.  ஒரு தமிழன்  "மளெ "  வந்துவிட்டது என்பதைக் கேட்ட மலையாள நண்பன் "  என்ன மளை,, மழை என்று சொல்" என்று திருத்துமளவிற்கு அது மலையாளத்தில் "தனித்தன்மை" பெற்று இலங்குகிறது.

தமிழ்ப் பேச்சு மொழியில்  (colloquial )  வாழ்க்கைப் பட்டாள் என்பதை வாக்கப்பட்டாள்     என்றுதான் திரிக்கின்றனர். 
இதுபோலவே 

கீழ்க்கடை  >  கீக்கடை;
தாழ்க்கோல் >   தாக்கோல் 

என்பவும் (=என்பனவும்)   அத்தன்மை உடையனவாம்.

வாத்தியம் என்பது  வாழ்த்தியமே.  ழகர  ஒற்று மறைந்து வாத்தியம் ஆயிற்று. 
இதில் கிருதம் ஒன்றும் இல்லை.  மங்கல நாளில் வாழ்த்தி( இசை)  இசைக்கப்பட்டதால்  வாழ்த்தியம் எனும் சொல் அமைந்தது. 

வாழ்த்தியம் என்பதில் உள்ள இறுதி  "இயம்"  
இயம்>  இயங்கு;  இயம் > இயக்கு.:   வாழ்த்தியக் கருவிகள் இயக்கப்படுவன .
வாழ்த்தியம் என்பது எத்துணை அழகமைந்த சொல் !  இதை  அறிஞர்  ஆய்ந்து உரைத்துள்ளனர் . 

அறியாத் தமிழன் அயலெனில்  அது தமிழென்று புகட்டுவோம்.   

பாவம் என்ற சொல்லும் அப்படியே.   பாழ் + வு+  அம் = பாழ்வம்  > பாவம் .  இங்கு வு ,அம்  என்பன விகுதிகள். 

Do you know that when you do something bad or evil today, it takes away or nullifies the good deed you performed yesterday?  So  yesterday's good became பாழ் .  That then is the பாழ்வம் or  பாவம்  in it.   It tarnishes you  just as a black spot in a white fabric.   "The good .doth is interred with your bones!"  (to follow Shakespearean language to some extent.)

பாவம் என்பதன் சொல்லமைப்புப் பொருள் இதுவே. 











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.