Pages

புதன், 8 அக்டோபர், 2014

அற்று அமிழ் சூரியன் - அஸ்தமிக்கிறது

சூரியன் இரவில் ஓளியற்றுக் கடலில் அமிழ்ந்துவிடுகிறது. அல்லது ஒரு மலைக்குப் பின் போய் ஒளிந்துகொள்கிறது.  நில நூலறிவு நிரம்பப் பெறாத மக்கள் முன்காலத்தில் இப்படி நம்பினர். கலங்கிப் போன ஒரு அழுக்குக் குட்டைக்குள் போய் மறைந்துவிடுகிறது என்றுகூட மக்கள் நம்பினர். பூமி தட்டையானது என்ற நம்பிக்கை அவர்களின் மூளைகளில் ஆட்சி செலுத்திய அக்காலத்தில் இந்த விளக்கங்களெல்லாம் சரிதாம்.


ஆனால் மொழியில் சொற்கள் உருவாகிய பழங்காலத்தில், இக்கருத்துக்களை வைத்து அவர்கள் சூரிய மறைவுக்கு ஒரு சொல் படைத்திருந்தால் அதுவும் சரிதான்.



அற்று அமிழ்கிறது சூரியன்; இரவு வந்துவிடுகிறது.



அற்று+ அமிழ் = அற்றமிழ் >  அத்தமி > அஸ்தமி.



சூரியன் அற்று அமிழ்கிறது > அத்தமிக்கிறது > அஸ்தமிக்கிறது.அறிந்து மகிழ்க! 


இது  மிக்க எளிதான  திரிபுதான்.  "ற்று"  என்பது  "த்து" ஆவதோ  வழக்கமானது. இதைப் பல சொற்களில்  கண்ட றிந்ததனால்,  இதை எழுத வேண்டுமென்று  கூடத் தோன்றவில்லை  இந்த இடுகையைத் தொடங்கும்போது. 

ழ்  வருமிடங்களில் கண்டிப்பாக ஒரு திரிபு இருக்குமே!  தமிழ் என்பது பேச்சில் "தமிளு " ஆகிறது. ழ் > ளு .   எச்சி(ல்)  உமிழ்"    என்பது   "எச்சி உமி"  என்றாகிறது.     வாழகை  என்பது வாடகை என்று மாறிவிட்டது.  ழ > ட .  இன்னொன்று:  பீழை > பீடை!  இன்னும் பல.

திரிபு உறப் பேசுதல் மக்களியல்பன்றோ ?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.