Pages

திங்கள், 28 ஜூலை, 2014

வேண்மாள் நல்லினி மகன் இமயவரம்பன் & கண்ணனார்

மன்னிய பெரும்புகழ் மறுவில் வாய்மொழி
இன்னிசை முரசின் உதியஞ் சேரற்கு
வெளியன் வேண்மாள் நல்லினி ஈன்ற மகன்

அமைவரல் அருவி இமையம் விற்பொறித்து
இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத்
தன்கோல் நிறீஇ தகை சால் சிறப்பொடு

பேரிசை மரபின் ஆரியர் வணக்கி
நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து
நெய்தலைப் பெய்து கைபிற் கொளீஇ

அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு
பெருவிற‌ல் மூதூர்த்  தந்து  பிறர்க்  குதவி
அமையார்த் தேய்த்த அணங்குடை நோன் தாள்

இமைய வரம்பன் நெடுஞ்சேர லாதனைக்
குமட்டூர்க் கண்ணனார் பாடினார் பத்துப் பாட்டு.

இது பதிகம். அழகாகப் பாடப் பெற்றுள்ளது. பனிமலை வரை சென்று தன் வில் கொடி பொறித்து, ஆரியரை அடக்கித் திறை பெற்று, யவனர் கொண்டுசெல்ல  முயன்ற வயிரங்களைப் பறிமுதல் செய்து ஒரு பழைய ஊருக்குக்குக் கொடுத்து,  மற்றொருக்கும் உதவிகள் செய்து,ஏனைப் பகைவரையும் அழித்த இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பத்துப் பாடல்களால் குமட்டூர்க் கண்ணனார் பராட்டி யுள்ளார்.

அடுத்து அணுக்கமாக அறிந்துகொள்வோம்.  தொடரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.