இனித் தசை என்னும் சொல்லை ஆய்வு செய்வோம். இது எழுத்துக்கள் முறை மாறி, சதை என்றும் அமையும். இவற்றில், தசை என்பதே முந்துசொல் என்பதால், அதையே ஆய்வுசெயல் தக்கது. சதை எனற்பாலது அதனின்று திரிந்து அமைந்த எழுத்து முறைபிறழ் சொல்.
தசையானது, என்புடனும் நரம்புடனும் தைக்கப்பட்டுள்ளது. தைத்தல் என்பதோ வெனின் இணைத்தற் பொருளதாம்.
முன் தயிர் என்பதனுள் நுழைந்து கண்டோம். தை > தய் > தயிர் என்பது காணப்பட்டது.
அதுவேபோல் தை > தய் > தசு > தசை. இனி, தை > தய் > தயை > தசை என்றும் ஆகும். இரண்டும் ஒரே தெருவழித்தான் செல்கின்றன. இரக்கத்துக்குரியோன்பால் மனம் சென்று தைத்தலும் அல்லது தையுறுதலும் தை > தய் > தயை தான். ஆனால் இந்தத் தயை உணர்வு, தசை என்று மாறாது. நிற்க, சதை குறித்த சொல் "தசை" என்று திரிந்தது,. தொடர்புடைய எல்லாம் திரியுமாயின் பொருள் குழப்பம் ஏற்படும். மொழிக்கடல் சில அலைகளைச் சில வரம்புக்குள் நிறுத்திவிடுகிறது. நடுக்கடல் அலைகள் எல்லாம் கரைக்கா வந்துவிடுகின்றன?
இங்ஙனம் தை என்ற அடியிற் பிறந்ததே தசை.
முன்னே கூறப்பட்ட சில திரிபு விதிகளை இங்கு மீண்டும் கொண்டு முன் நிறுத்தவில்லை. சுருங்கச் சொல்லல் கருத்தாம். For further information and clarity, please refer to the older posts.
http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_28.html
http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_3822.html
http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html
தசையானது, என்புடனும் நரம்புடனும் தைக்கப்பட்டுள்ளது. தைத்தல் என்பதோ வெனின் இணைத்தற் பொருளதாம்.
முன் தயிர் என்பதனுள் நுழைந்து கண்டோம். தை > தய் > தயிர் என்பது காணப்பட்டது.
அதுவேபோல் தை > தய் > தசு > தசை. இனி, தை > தய் > தயை > தசை என்றும் ஆகும். இரண்டும் ஒரே தெருவழித்தான் செல்கின்றன. இரக்கத்துக்குரியோன்பால் மனம் சென்று தைத்தலும் அல்லது தையுறுதலும் தை > தய் > தயை தான். ஆனால் இந்தத் தயை உணர்வு, தசை என்று மாறாது. நிற்க, சதை குறித்த சொல் "தசை" என்று திரிந்தது,. தொடர்புடைய எல்லாம் திரியுமாயின் பொருள் குழப்பம் ஏற்படும். மொழிக்கடல் சில அலைகளைச் சில வரம்புக்குள் நிறுத்திவிடுகிறது. நடுக்கடல் அலைகள் எல்லாம் கரைக்கா வந்துவிடுகின்றன?
இங்ஙனம் தை என்ற அடியிற் பிறந்ததே தசை.
முன்னே கூறப்பட்ட சில திரிபு விதிகளை இங்கு மீண்டும் கொண்டு முன் நிறுத்தவில்லை. சுருங்கச் சொல்லல் கருத்தாம். For further information and clarity, please refer to the older posts.
http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_28.html
http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_3822.html
http://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_27.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.