Pages

திங்கள், 30 ஜூன், 2014

"கவ்வை" என்பது. கவ்விக்கொள்வது.



சில நிகழ்வுகள் நம்மையும் நம் நேரத்தையும் "கவ்விக்" கொண்டுவிடுகின்றன. கவ்வுதல் என்றால் என்ன? அது இரண்டாகப் பிளந்து நம்மை அகப்படுத்தி, இறுகப் பிடித்துக் கொள்கின்றது . விடுபாடு என்பதோ கடினமான காரியம் ஆகி விடுகிறது.

இப்போது கிசுகிசுப்புகள் என்று சொல்லப்படும் பேச்சுகளும் ஒருவாறு கவ்வுதலைச் செய்வனவே. இக் "கவ்வுதலில்" அகப்பட்டுக்கொள்வதும் மன உளைச்சல் தருவதேயாம். அலர் எழுதலும் அப்படியே. இன்னும், துன்பம், துயரம், ஆழ்ந்த எதிர்பார்ப்பு, பொறாமை முதலியவையும்   ஆம்.

இவை எல்லாவற்றுக்கும் ஒரு சொல் என்றால், அதுதான் "கவ்வை" என்பது.
கவ்விக்கொள்வது, அல்லது கப்பிக்கொள்வது.

கவை, கவடு, கபடம்,கபாடம் எல்லாம் பிறகு காண்போம்.

Some matters consume you, others swallow you up.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.