சிங்கப்பூரில் வீரமாகாளியம்மன் ஆலயத்தில் 22.6.2014lல் கும்ப நீராட்டு நிகழ்ந்தது. .....(கும்பாபிஷேகம்). அதுபற்றிச் சில வரிகள்.
இவ்வாலயம் சிறப்பாக எடுத்துக் கட்டப்பெற்றுள்ளது.
வீரமா காளியம்மை நேரில் வந்தாள்
தீருமினி வேதனைகள் பேரே ஓங்கும்!
சீரங்கு விளங்கும்சீ ராங்கச் சாலை
சேருபல தெருக்களிலும் கூறும் நாமம்
வீறுடனே வான்முட்டும்! நீறும் பூசி
யாரும்கை கூப்பிடவே யாழே போல
ஊறுமிசை! உயர்முழுக்கு, கும்பம் காணும்.
மாறிலதாம் மங்கலமே சிங்கை தன்னில்.
குறிப்பு: பெரும்பாலும் எதுகைகளை வைத்தே இது .புனையப்பட்டுள்ளது மாறிலதாம் = மாறுபாடில்லாத .
அடுத்துவரும் இடுகையும் இவண் யாகசாலையில் வெளியில் நடந்தது பற்றியது ஆகும்.
இவ்வாலயம் சிறப்பாக எடுத்துக் கட்டப்பெற்றுள்ளது.
வீரமா காளியம்மை நேரில் வந்தாள்
தீருமினி வேதனைகள் பேரே ஓங்கும்!
சீரங்கு விளங்கும்சீ ராங்கச் சாலை
சேருபல தெருக்களிலும் கூறும் நாமம்
வீறுடனே வான்முட்டும்! நீறும் பூசி
யாரும்கை கூப்பிடவே யாழே போல
ஊறுமிசை! உயர்முழுக்கு, கும்பம் காணும்.
மாறிலதாம் மங்கலமே சிங்கை தன்னில்.
குறிப்பு: பெரும்பாலும் எதுகைகளை வைத்தே இது .புனையப்பட்டுள்ளது மாறிலதாம் = மாறுபாடில்லாத .
அடுத்துவரும் இடுகையும் இவண் யாகசாலையில் வெளியில் நடந்தது பற்றியது ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.