my poems லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
my poems லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஜூன், 2019

fraction of your most valued time....



Only a   fraction of your most valued time
To glance here at literary Tamil;
In return get the pleasure of your lifetime;
And escape from usual run of the mill.

Walk through to your heart’s content
Raise your afterglow index.  

வியாழன், 21 ஜூன், 2018

அடிமேல் அடியடித்தால்

அடிமேல் அடியடித்தால் அம்மி நகருமென்றார்
கடிமேல் கடிகொடுத்தால் இம்மியே  னும்கிழியும் 
கடிநாய் அறிந்தவற்றைக் கள்வர்  அறிந்தவரே
ஒடிவார் தமையொடிக்க உள்ளுவார் வல்லவரே.

இ-ள்:

நம் மென்பொருள் கள்வர்கள் பற்றிய கவிதை இது.
இங்கு ுு   தரப்பட்டுள்ள பழமொழிகள் படி, அவர்கள் 
எல்லாம் அறிந்தவர்களே ஆவர்.  எத்தனையோ வகையில் 
இடையூறுகளை விளைவித்துக்கொண்டுள்ளனர். 
கடைசியாக அவர்கள் எம் எழுதிகளைச் செயலிழக்கச்
செய்துள்ளனர்.  எனவே முன்வரைவுகளும் சரிபார்த்தலும்
இயலாதவை ஆகின்றன.  

நாய்போல் கடித்துக்கொண்டிருந்தால் ஓர் இம்மியேனும்
கிழிய வேண்டுமே. அப்போது தசையைத் தின்றுவிடலாம்
என்று நாய்கள் நினைப்பதைக் கள்வர்களும்  தெரிந்துதான்
வைத்துள்ளனர்.  ஆனால் ஒடிந்துவிடக் கூடியவர்களை
ஒடித்துவிடுபவர் வல்லவர்தாம் என்று சொல்லவேண்டும்.

திங்கள், 23 ஏப்ரல், 2018

குருவி மரத்திலொரு- தந்திரம்

அந்த மரத்திலொரு குருவி — நான்
அறியா ஒலியினில் பாடியதே!
அந்தி மயக்கினிலே நழுவி — மனம்
அங்கு கவனத்தில் ஓடியதே.

என்ன இசையிது சொல்வாய் — என
யானும் ஆவலொடு கேட்டுநின்றேன்;
உண்ணப் பூச்சிபுழு கொல்வேன் –அவை
ஓலம் இட்டவொலிப் பாட்டென்றதே.

தனது செயலைப்பிறர் மேலே– போடும்
தந்திரம் உனக்கும் வந்ததுண்டோ?
மனிதர் என்பவரைப் போலே — சென்று
மாறும் அடிச்சுவடு முந்தியுண்டோ?

sivamala

திங்கள், 2 ஏப்ரல், 2018

தென் கண்டத்துப் பாலை அழகு Australian deserts



மேற்குத் தென்`கண்டத்தில்
மிகுவிரி மணற்பரப்பும்
ஏற்கும் ஒளிவெள்ளத்து
எல்லோன் இறங்குமுகம்.

ஒட்டகத்து உயர்முதுகை
ஒட்டியே அமர்ந்து நகர்
வெட்டவெளிச் செலவினையே
வேண்டிவரு வோர்பலரே.

தாழ்வரு செடிகொடிகள்
தருங்கவின் கண்டுவிட்டீர்
வாழ்வருகி விட்டவரள்
வண்ணமிது கண்ணுறுவீர்.

மாலைவெயில் மஞ்சளிட்டு
மனம்கொஞ்சும் இராக்கூட்டும்
பாலையிலும் இயற்கைத்தாய்
பதுக்கிவைத்த பெருகெழிலே.


 அரும்பொருள்:

மேற்குத் தென் கண்டம்:  ஆஸ்திரேலியாவின்
மேற்குப் பகுதி.
ஒளி வெள்ளம் :  சூரிய ஒளி.
எல்லோன்: சூரியன்.

வெட்ட=  வெளிச்சமுள்ள
செலவு :  பயணம்
வேண்டி : விரும்பி

தாழ்வரு : தா(ழ்)வரங்களாகிய.
வாழ்வருகி : உயிர்கள் வாழாத.
வரள் வண்ணம்: வரண்டுபோன அழகு.

இரா: இரவு
கூட்டும்: சேர்க்கும்
பெருகெழில்: அதிக அழகு.
பாலை: பாலைவனம் 

கருத்து:  வரண்டுவிட்ட உயிர்கள் வாழாத பாலை
வனமும்கூட மாலை வெயில் சாயும் நேரம் ஒட்டகத்தில்
ஏறிச்செல்கையில் ஓர் மறைந்துகிடந்த ஒப்பற்ற அழகினையே
வெளிக்காட்டுகிறது.  இயற்கை அனைத்தும் எல்லாம்
அழகே.

சனி, 3 மார்ச், 2018

tamil nadu newspapers



தனிச்சுவையாய் இனித்திடுமாம் தமிழர்நா டாக்கும் செய்தி;
தரணியிலே இருப்போருள் தமிழர்போல் செய்தி தந்தோர்
இனிச்சென்றே எங்கேனும் திரக்கிடினும் யாண்டும் காணோம்;
இருப்பனவும் உடைப்பனவும் உடைப்பனசேர்த் தாக்கம் என்று
கணிக்கவரும் அனைத்தினையும் கண்டிடலாம் செய்தித் தாளில்
காசுதனைப் பார்க்காமல் கடுகிப்போய்  வாங்கிப் பார்க்க!
மணிக்குட்த்துள் யாவினையும் திணிக்கினது போன்ற பன்மை
மகிழ்வுறுத்தும் மனமகழ்க்கும் மற்றும்செயும் யாவும் உண்மை

வியாழன், 30 நவம்பர், 2017

Third party blocking.....

சிவமாலா வலைப்பூவோ ஓட வில்லை;
சேர்ந்தயர்த்திச் சீர்கெடுக்கும் பூச்சி யாதோ!!
அவமாகும் இயுல்பிதுவோ சதியே தானோ
ஆர்வந்து செய்வதென்ன?  அறியேன் யானே!
தவமுனிகள் வந்தாலும் தகுந்த வாறு
தடையகற்றித் தட்பமெய்தக் கூடாத் துன்பம்.
இவணினிமேல் செய்வதற்கோ ஏதுமில்லை
இன்னொருநாள் நன்னாளாம் மகிழ்வு காண்போம்.


Yesterday:   The blog post simply failed to load.  Hence we could not post at all!!

Other websites functioned normally.

A poem composed online was lost at finishing stage.
Hence the above was posted from a different site.

Now we have this blockade.
An error occurred while trying to save or publish your post. Please try again. Dismiss 
You dismiss it, it comes back and blocks.
I am having "fun". 


புதன், 2 ஆகஸ்ட், 2017

இரவில் விழித்தெழுந்தால் கவலையே!.....

இரவில் விழித்தெழுந்தால் ‍== அந்த‌
இனிமைப் புறாக்களைக் காணாக் கவலையே!
உறவென் றிலையெனினும் ==  அவை
குமுறிப் பறப்பதும் உண்பதும் ஈர்த்தெனை
வரவழை காலையினை  == என்னும்;
வல்லமை இன்மையின் வாளா திருப்பனே!
இரவும் விலகுதற்கு === இனி
இருத்தல்  கிடத்தலே  அன்றியென் செய்வது?

இருந்திடும் போதினிலோர் == தமிழ்
இன்கவி என்பதே என் துணை ஆனது!
வருந்துதல் நீக்கியதே ==  நல்ல‌
வண்ணக் கவின் தனில் எண்ணம் பதிந்தன.
அருந்துகி றேன் தமிழ்த்தேன்  === அது
அந்தி இரவினிக் காலை பகலென‌ப்
பொருந்துமெந் நேரத்திலும் == அந்தப்
புறாக்கள் இவண்சேர் விடியலும் வந்திடும்.

வெள்ளி, 14 ஜூலை, 2017

அதிபர் திரம்பின் ஆதரவை அடைந்த இந்திய........

அதிபர் திரம்பின் ஆதரவை
அடைந்த இந்தியப் பெருநாடு
புதிய திறத்தில் பொலிவோடு
புயத்தை உயர்த்தி நிற்கிறதே!
நிதியில் குறைவே போர்முறைக்கு
நேமித் திருந்த போதினிலும்
பதிய வைத்தது தன்கருத்தை,
பாரோர்  அறிந்து வியந்திடவே!.

அஞ்சிப் பதுங்கி இருப்பதுவோ
அயர்ந்த  தளர்ச்சி அமிழ்த்திவிடும்.
கெஞ்சிக் கிடந்து சுருங்குவதோ
கேட்டை விளைக்கும் இறுதியிலே!
நெஞ்சில் உரமாய் நின்றுவிடில்
நிழலுக் கஞ்சா தவரெனவே
மிஞ்சும் எவரும் உணர்ந்திடவோர்
மேன்மைத் தருணம் உறுத்துவதாம்.

உணர்ந்த பகைமை நாட்டினரும்
ஒன்றித் திருந்தால் உயர்வெனவே
உணர்ந்தும்  அமைதி வேண்டுவராய்
உலகில் உரையாட் டணைந்திடுவார்;
அணைந்த படகின் பயணிகளும்
அச்சம் தவிர்ந்தே இறங்குதல்போல்
இணைந்தே  ஒருமைத்  தரைதனிலே
இனிதே பயணம் பெறமகிழ்வார்.
  

செவ்வாய், 11 ஜூலை, 2017

Terror attack on Amarnath pilgrims.

யாத்திரையாய் அமர்நாத்து நோக்கிச் சென்றார்
யாதொன்றும் யார்க்கெனினும் தீங்கே இன்றி
ஈத்துவக்கும் நெஞ்சினராய் பேருந்  துக்குள்
இனிதாக  ஊர்ந்துகொண்டே இருந்த வேளை
கூர்த்தகொடு தீவிரவா தத்தோர் சுட்டுக்
கொலைசெய்தார் எழுவரையே பல்லோர் காயம்;
ஆர்த்தபிற பயணிகளும் அஞ்சா நெஞ்சில்
அற்றுவிடாப் பற்றுடனே தொடர்ந்து வென்றார்.

இதைச்செய்து முடித்துவிட்டால் காசு மீரம்
இம்மென்று வந்திடுமோ மூட நோக்கில்
பதைபதைக்கப் பலர்செத்த போதும் என்ன‌
பயனையா  பாரிலென்ன கைக்குள் சேரும்;
எதைஎதையோ செய்வதெலாம் ஏறிச் சொர்க்கம்
இயன்றிடவே செய்திடுமோ மூளைக் கேடே!
வதைசெய்து பாவத்தின் வாய்ப்பட் டார்க்கு
வாய்த்திடுமே எரிநரகே அரனே வாழ்க.



ஈத்துவக்கும் = ஈந்துவக்கும், கொடையால் மகிழும்.
இங்கு எதுகை நோக்கி வலித்தல்.

இம்மென்று =  உடனே.

அரனே = கடவுளே







ஞாயிறு, 2 ஜூலை, 2017

On blogs pretending to be our blog

பொய்வலைப் பூக்கள் பூத்தன இணையத்தில்;
கைவலை போலும்  கயவர் புனைந்தவை
மெய்வலம் போவதை மிதித்துத் துவைத்திட
உய்விலர் ஊத்தையர்  உவந்து விளைத்தவை.

கைவலை :   பக்கவலை;  கூடுதலாக ஏற்படுத்திய இணைய வலை;
ஊத்தை :   அழுக்கு. இங்கு தீயமனம் காட்டுகிறது;

வெள்ளி, 30 ஜூன், 2017

வந்தஎல்லாம் எழுதவேண்டும்

வந்தஎல்லாம் எழுதவேண்டும் என்னும் உள்ளம்.
வாய்ப்பில்லை  வழிவிட்டால் தானே வெல்ல?
செந்தமிழைக் கணினியிலே சீராய்ச் செய்யும்
செவ்வெழுதி ஒவ்வாமைப் போரில் தொய்யும்!
இந்தநிலை எய்தியதால்  ஏய்ந்த எல்லாம்
ஏற்றுதலோ கூற்றுவன்வாய்ப் பட்ட வல்லோ!
மந்தநிலை வந்திடாமல் மாற்றி ஆக்கம்
மலர்விக்கும் எம்முயற்சி புலரு மாமோ!


பொருளுரை:

வந்த எல்லாம் --- மனத்தில் எண்ணிய எல்லாம்;
என்னும் உள்ளம் ---  என்று மனம் சொல்லும்;
வழி விட்டால்தானே---   (கணினி) ஒத்துழைத்தால் தானே;
வெல்ல ==  வெற்றி அடைய (முடியும் ).
செவ் வெழுதி === நல்ல எழுதி (  எடிட்டர்)
ஒவ்வாமை --- ஒத்துழைக்காமல் போதல்.
போரில் --   போராட்டத்தினால்;இழுபறியால் .
தொய்யும்----இயக்கத்தில் சிறப்பு கேடு அடையும்;
ஏய்ந்த ===  வந்து சேர்ந்த;
ஏற்றுதலோ --   வலைத்தளத்தில் வெளியிடுதலோ;
கூற்றுவன் வாய்ப்பட்ட  -  அழிவிற் பட்டன;
அல்லோ - அல்லவோ;
மந்த நிலை -- இயக்கம் கெடுதல்:
புலருமோ --  ஒளியில் மேல்வருமோ.

செவ்வாய், 27 ஜூன், 2017

அதிபர் டிரம்ப் President Trump

விருந்தாளி மோடியையே  விரிந்த  அன்பில்
மிகுந்தகை குலுக்கலுடன் புரிந்து  கொண்டார்;
திருந்தாத தீவிரத்தால் தெண்மை இல்லாத்
திரிபுள்ளம் கொண்டோரை இறுகக் கட்டும்
பெருந்தோதில் ஈடுபாடு பகிர்ந்து கொண்டார்;
அருந்துவதில் அவர்வேறு இவரோ வேறே
இருந்தாலும் குறையாதும் பொருந்தி டாமல்;
இவரிந்தப்  பார்ப்பணியை   ஏற்பச் செய்வார்.




திங்கள், 19 ஜூன், 2017

stopping urinating in public results in murder!!

இழுத்தோடும் வண்டிக்  காரன்
இவன்பக்கல் வந்தான் "தம்பீ
கழிக்காதே நீரை யாரும்
காணப்பல் லோர்முன் என்றான்;
ஒழித்தேன்நான் உன்னை என்றே
ஓய்ந்தேனும் நோக்கான் ஆகி
அழித்தான்தபின் நில்லான் அந்தோ!
அகிலமும் செல்வ தெங்கே


Murders take place all over the world for many reasons.  A Rickshawala stopped someone
from urinating in public. That person turned round and killed the poor rickshawala for
saying it to him.

http://www.straitstimes.com/asia/south-asia/modi-demands-swift-punishment-for-murderers-of-rickshaw-driver-who-tried-to-stop?utm_source=Outbrain&utm_medium=CPC&utm_campaign=Test&xtor=SEC-23



திங்கள், 12 ஜூன், 2017

கல்லெறி கலகரை

கல்லெறி  கலகரைக் கட்டிப் போடுதல்
காலம் காணாத குற்றமோ?
கல்லடி பட்டவர் பற்பலர் வீழ்வதைச்
சொல்லிப் புகழ்வதும் திட்டமோ?
சொல்லெறி வாளர்கள் நல்லதைக் கண்டிடச்
சொல்படைத் தலைவரைத் திட்டுமோ?
வல்லடி செய்தவர் தம்மை அடக்குதல்
மன்பதை நேயமாய்ப் பட்டதே.

புதன், 7 ஜூன், 2017

உந்தி விளைப்பது தீவிர வாதமோ!

பழம்பெரு மைபல பயின்றொளிர் நாடுகள்
பல்கிய மண்ணே வல்கலை நண்ணிலம்;

சட்ட மெனபதைக் கட்டி எழுப்பி
அசத்திய நாடு மெசோபோட் டேமியம்.

அம்மு ராபி அமைத்திட் டருளிய‌
குற்றச் சட்டங்கள் எற்றெனக் கேள்நலம்.

இந்த நாடுகள் இற்றை நிலையில்
உந்தி விளைப்பது தீவிர வாதமோ.

உண்மை உணரா வண்க ணாளர்கள்
உளுத்துப் பெருகினர் உலகின் மீதில்.

ஈரான் மன்றிலும் தீவெடி கூட்டினர்;
ஆராத் துயரே அகலுள் அனைத்திலும்

பாரத எல்லையில் பதட்டம்; ஆங்கு
ஊரினர் யார்க்கும் கூருகுண் டச்சம்,

அன்பின் வழியது உயிர்நிலை மறந்தார்
துன்பில் துவண்டார் உலகும் இருண்டது;

இனி இவ் வுலகம் மீளுமோ
கனிதொலைத் தவர்க்குக் காயே உளதே.

புதன், 24 மே, 2017

மான்செஸ்தர் மாநகரில்.....


மான்செஸ்தர் மாநகரில் மாய்வு விளைத்தோர்தம்
கூன்சிந்தைக் கென்னநாம் கூறுவோம் ~~ வான்சிந்தும்
மாரியும் கண்ணீராய் மாறிற்றே சோரரும்
பாரில் திருந்தலெந் நாள்.


கூன் = குறையுடைய‌
மாய்வு =  மரணம்
மாரி = மழை;
சோரரும் =  மறைந்து குண்டு வைத்தோர்

ஞாயிறு, 14 மே, 2017

Metro Rail extended in Chennai.

மின்விரைவுத் தொடரியுமே சென்னைவர என்னவொரு
பாக்கியமே என்றுபாடு;
முன்வரவே வேண்டியதாம் மண்மகிழ நன்முறையில்
வந்ததின்று வென்றியாடு.

சென்னையொரு பெருநகரம் சீருடனே ஏற்றமெலாம்
நேர்படுதல் வேணும் வேணும்;
பின்னைவரு நல்லிளைஞர் பெருமிதமே கொள்ளுவணம்
பேறுகளைப் பொழிதல்வேணும்.

அடையாறு முனம்போனேன்;  அவண்தொடரி தனிலேறி
அழகான பயணம்செய்தேன்;
இடைநாளில் நீடுறவே இயலாது பாடுறவே
இருந்ததது சிறந்ததின்றே.

நகர்ச்சென்னை வாசியலேன்; நான்சுற்றுப் பயன்விழைவேன்;
நகரங்கள் வளர்கவென்று
புகரின்றி விழைவதனால் புகல்கின்றேன்; இறையருளே
பொழிபெறுக வேண்டிநின்றேன்.

தொடரி  : ரயில் வண்டி .



  

சனி, 6 மே, 2017

நல்லதோர் தீர்ப்பிது...........

இங்கு குறிப்பிட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பாராட்டி ஒரு பாடலை
எழுதியிருந்தேன். இன்னொரு பாடலையும் எழுதினேன். அதை அப்போது வெளியிடவில்லை. அதை இங்கு பதிவு செய்கிறேன். நன்றாக இருப்பின் பாடி மகிழுங்கள்.

நால்வருக்கும் சாவென்ற நல்லதோர் தீர்ப்பிது
மேல்வர நாட்டினர் மிக்கமகிழ் ‍‍=== வால்வரிந்து
ஏற்ப துறுதியே  இஃதொன்றும் தீதில்லை;
கேட்பாரும் கீழ்மை அற.

இதன் பொருள்:

நால்வருக்கும் ~  நான்கு குற்றவாளிகளுக்கும்;
சாவு என்ற ~  மரணதண்டனை உறுதி என்று முடித்த;
மேல் வர ~   சட்டமறிந்த மேல்முறையீட்டின் வழியாக வர;
மிக்க மகிழ்வால் வரிந்து ஏற்பது ~  உள்ளம் மிக மகிழ்ந்து முன்னின்று ஒத்துக்கொள்வது;
இஃதொன்றும் தீதில்லை  :   இத்தகைய குற்றவாளிகட்கு மரணதண்டனை தருவதில் குறையொன்றும் இல்லை;
கேட்பாரும் ~ இதைக் கேட்டறிந்தவர்களும்;
கீழ்மை  குற்றமிழைக்கும் தன்மை நீங்கப்பெறும்படியாக.


இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.


நிருபயா உச்சநீதி மன்ற வழக்கில்
அருமையாய்த் தீர்ப்பு வழங்கினர் நன்றுநன்று.
கற்பழித்துக் கொன்ற இரண்டிரு பேருக்கும்
பிற்பகலில் தூக்கென்றார் பேதமில்லாச் சாதனையே!
கொள்ளை கொலைகற் பழிப்பினைப் போன்றவை
எள்ளளவும் ஏற்றுக் கொளவியலாக் குற்றங்கள்.
குற்றமொன்றும் செய்யாது கூனின்றிப் பேருந்தில்
பற்றியேறிச் செல்பயணி பால்பாய்ந்த பாழ்ங்கையர்
உள்குடலைப் பேர்த்தனர் ஓரிரக்கம் இல்லாமல்
பல்கடல் சூழ்நாட்டி லும்பதைக்கப் பாவிகள்!
குற்றமே கொய்த முறைமன்று முற்றும்நம் 

கைதட்டைப் பெற்றதே காண்.  

There is an inherent alignment error.
Will edit  and try later.




இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

வியாழன், 27 ஏப்ரல், 2017

சிறந்த தலைவர் மோடி......

சிறந்ததொரு தலைவரிந்தி யாவிற் கென்றால்
செவ்வியநன் மகன்மோடி இவ்வா றுண்மை,
உரந்தருமா றுரைப்பார்கள் உலகிற் பல்லோர்!
ஒட்டலுறு உரைஇஃதே  வெட்டல் இல்லை!
வரந்தருவார் கடவுளென்றார் தந்தார் காணீர்.
வந்தபெரு விளக்கினையே காத்துக் கொள்வீர்.
நிரந்தரமே மக்களாட்சி;  நேர்மை போற்றி
நில்புகழைப் பாடுமணி மோடி தாமே.

பழையமொழி பண்பட்ட தமிழே என்றார்
பாலியத்தில் படிக்கவிலை; அறிந்தேன் இன்றே!
இழைநாக ரிகந்தனிலே ஒளிரக் கண்டேன்;
எல்லோரும் அறிவதிலே நலமே உண்டே.
விழைவுறவே பிறமொழிகள் அறிக நீங்கள்.
வேறுபண்பா டென்றாலும் விரும்பிக் காண்பீர்.
குழைபடராத் தெளிநீர்போல் மோடி கூற,
கோதிலதாய்க் காதுக்குள் ஒலித்த கீதம். 

 


டில்லி நகராண்மைத் தேர்தல்களிலும் மோடி பெரும்பான்மை பெற்றுள்ளார்.