வியாழன், 14 அக்டோபர், 2010

ஆண்டு பலசெல்லும்

ஆண்டு பலசெல்லும் ஆனாலும் பிள்ளையே
ஆண்டவர்க்கு நீ இதை ஆழ்ந்துணர்ந்தால் --- வேண்டுமோ
தீண்டி அடையும் தெருள்சேரா இன்பமதைத்
தாண்டி மனம்நிறுத்து வோம்.



கிட்டிய தெல்லாம் கிழமும் இளைஞனுமாம்
மட்டிலா மாவொளியின் மாணருளே --- ஒட்டியுயிர்
உள்ள பொழுதே உவந்து வணங்கியே
கள்ளம் இலாவாழ்வு காண்.



மன்னும் அகந்தன்னில் மாசில் மணவழகன்
தன்னைத் தலைதாழ்ந்து போற்றியும் --- தன்னையே
தானறிந் துள்ளடங்கித் தாரணியில் வாழ்வாரை
ஏனணுகும் துன்ப மினி



நிறைவாழ்வோ கற்பின் நெறிகெட்டால் நித்தல்
சிறைவாழ்வே சீரழிவின் சேர்க்கை --- முறைசேர்
இறையுணர்வில் தோய்ந்தே இனிக்கும் இசையில்
கறைபுகல் இல் வாழ்வில் கனி.


கலம்குறை நீராய்வீண் காலம் கழிப்பன்
விலங்கினமும் வெல்லும் நரனை--- நலங்கள்
பலபெற்று வாழ்வனவோ பார்மனக்கண் முன்னே
வலம்வருமே வாய்க்குமோ சான்று?

கருத்துகள் இல்லை: