புதன், 24 டிசம்பர், 2008

ஆயிரம் ஆண்டுகளின் முன்.....

ஆயிரம் ஆண்டுகள்் முன்னே -- சென்றே
அங்கே தமிழென்று ு சொன்னால் --- ஓடிப்
போயின புன்பகை எண்ணி --- நெஞ்சம்
பூரித்ததே என்ன சொல்வேன் !!

அங்கிருந் தாயிரம் சென்று --- எந்த
அம்பலத் தின்முன்பும் நின்று --- தமிழ்
பொங்கப் புகன்றனை என்றால் -- மண்டி
போட்டு வணங்கினர் நன்றாய்!

இன்னும் ஈராயிரம் போனால் --- அங்
கிருந்ததுவே ஒரு கண்டம்; --- அதில்
பொன்னும் மணியும் தமிழும் -- ஒளி
பொய்யா நிலைபெற்ற துண்டே!!

இந்தப் புகழ்சொலும் உன்னை -- உன்
இருப்பிடம் என்றிடும் மண்ணைக் -- கொள்ள
மந்தத் தலைகொண்ட மாந்தர் --- வரின்
மண்டை அடிகொடு சேர்ந்தே!!

கருத்துகள் இல்லை: